ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களில் உற்பத்தியில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழும் பாக்ஸ்கான் 200 ஏக்கர் அளவில் மிகப்பெரிய தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது.
பாக்ஸ்கான்
இதற்காக மும்பையில் ஜவஹர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் அருகில் உள்ள சிறப்புப் பொருளாதாரப் பகுதியில் இதற்கான இட ஒதுக்கீடு செய்யுப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில், பாக்ஸ்கான் நிறுவனம் 6,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகமுக்கிய சப்ளையர் ஆக இருக்கும் தைவான் நாட்டைச் சேர்ந்த பாக்ஸ்கான் அமைக்கும் இப்புதிய தொழிற்சாலையில் சுமார் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்க உள்ளது.
நித்தின் கட்கரி
பாக்ஸ்கான் நிறுவனத்திற்கான இடம் ஒதுக்கீடு குறித்தும், தொழிற்சாலை குறித்த தகவலைக் கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நித்தின் கட்கரி உறுதி செய்துள்ளார்.
JNPT SEZ
ஜவஹர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் கீழ் இருக்கும் சிறப்புப் பொருளாதாரப் பகுதியில், மொத்தம் 277 ஹெக்டர் நிலம் உள்ளது. இதில் 77 ஹெக்டர் நிலம் சாலை மற்றும் இதர வசதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 200 ஹெக்டர் நிலத்தை நிறுவனங்கள் ஏல முறையில் கோரலாம். தற்போது இப்பகுதியில் இருக்கும் நிலம் டிமான்டாக உள்ளது.
60,000 கோடி முதலீடு
இப்பகுதியில் அமைக்கப்படும் தொழிற்சாலையின் மூலம் சுமார் 2 லட்ச வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டும் அல்லாமல் சுமார் 60,000 கோடி முதலீட்டை ஈர்க்கும்.