பொதுத் துறை வங்கி நிறுவனமான கார்ப்ரேஷன் பாங்க் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வரக் கடனை குறைத்து, மூலதனத்தை உயர்த்துவது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி உடனடி திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
கார்ப்ரேஷன் வங்கி இது குறித்து முழுமையான விவரங்களை அளிக்கவில்லை என்றாலும் இதனால் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது.
செப்டம்பர் மாதம் கடைசி வரை கார்ப்ரேஷன் வங்கியின் செயல்படச் சொத்து விகிதம் 10.24-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிகப்படியான வராக்கடன் உள்ளதால் மத்திய வங்கியானது மேலும் பல பொதுத் துறை வங்கி நிறுவனங்களிடமும் இதே போன்று சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
Corporation Bank by Tamil GoodReturns on Scribd