வங்கி ஊழியர்கள் சங்கங்களில் ஒரு பிரிவினர் 2012-க்கு பிறகு ஐடிபிஐ வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கவில்லை என்று 2017 டிசம்பர் 27-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தினால் சேவை தடை வாய்ப்பு உள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கி போன்றவை வாடிக்கையாளர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர்.
நோட்டிஸ்
இந்திய வங்கிகள் சங்கம், அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் சங்கங்கள் அனைத்து வங்கிகளுக்கும் டிசம்பர் 27 வேலை நிறுத்தம் குறித்து நோட்டீஸ் மூலமாகத் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை
ஐடிபிஐ வங்கி ஊழியர்களுக்குச் சம்பள உயர்வைத் தாமதப்படுத்தாமல் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடக்க இருப்பதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் சி எச் வேங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
2012-ம் ஆண்டு முதல் ஐடிபிஐ வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படாமல் உள்ளது என்றும், மூத்த ஊழியர்கள் ஆணையர் இது குறித்த சமரச கூட்டத்திற்கு டிசம்பர் 30-ம் தேதி அழைத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வேலை நிறுத்தம்
நாளை நடைபெற இருக்கும் கூட்டத்தில் வங்கி நிர்வாகம் ஊதிய உயர்வுக்கு உறுதி அளிக்கவில்லை என்றால் கண்டிப்பாக 27 டிசம்பர் வங்கிகள் வேலை நிறுத்தம் செய்யும் என்று கூறப்படுகிறது.