பொதுவாக இந்திய நுகர்வோர் சந்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தக இலக்கு என்றே சொல்லவேண்டும். அதிலும் குறிப்பாக ஆட்டோமொபைல் சந்தையை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு வருடமும் பயணிகள் வாகனங்களைத் தயாரிக்கும் புதுப்புது நிறுவனங்கள் வந்துகொண்டே இருக்கிறது.
ஆனால் 3 நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து வெற்றி பெற்று, இந்திய கார் விற்பனை சந்தையில் 74 சதவீதத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
வளர்ச்சி
இந்த 3 நிறுவனங்களின் சந்தை ஆதிக்கம் 2012-13ஆம் நிதியாண்டுகளில் 65.6 சதவீதமாக இருந்த நிலையில், பல புதிய மாடல்கள், வடிவங்களைப் பல நிறுவனங்கள் அறிமுகம் செய்தாலும் மக்களின் ஆதரவுடன் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதன் மூலம் 2017-18ஆம் நிதியாண்டில் இந்த 3 நிறுவனங்களின் சந்தை ஆதிக்கம் 74 சதவீதமாக உயர்ந்துள்ளது.
15 முன்னணி நிறுவனங்கள்
இந்தியாவில் 25க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் கார்கள் விற்பனை செய்யப்பட்டாலும், 15 நிறுவனங்கள் மட்டுமே பெரிய அளவிலான கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதில் 6 நிறுவனங்கள் மட்டுமே கடந்த 5 வருட காலகட்டத்தில் விற்பனை அளவுகளைத் தொடர்ந்து உயர்த்தியுள்ளது.
3 நிறுவனங்கள்
இந்திய கார் விற்பனை சந்தையில் மாருதி சுசூகி, ஹூண்டாய், ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் மட்டும் சுமார் 74 சதவீத சந்தையைக் கொண்டுள்ளது.
மாருதி சுசூகி
5 வருட காலத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை அளவு 27.2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, அதேபோல் சந்தை மதிப்பு 39.5 சதவீதத்தில் இருந்து 47.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2018ஆம் நிதியாண்டில் இது 50.2 சதவீதம் வரையில் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய்
5 வருட காலத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை அளவு 25 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, அதேபோல் சந்தை மதிப்பு 14.4 சதவீதத்தில் இருந்து 16.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஹோண்டா
கடந்த 5 வருட காலத்தில் ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை அளவு 53.2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, அதேபோல் சந்தை மதிப்பு 2.8 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2018ஆம் நிதியாண்டில் இது 5.5 சதவீதம் வரையில் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
6 நிறுவனங்கள்
2012-13 மற்றும் 2016-17 நிதியாண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் மாருதி சுசூகி, ஹூண்டாய், ஹோண்டா, போர்டு, ரெனால்டு மற்றும் நிஸ்ஸான் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே விற்பனையில் வளர்ச்சி கண்டுள்ளது.