இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி, பல்வேறு திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள் மூலம் சுமார் 24,000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பின்பு இவ்வங்கியின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த இரண்டு வருடமாக இந்நிறுவனத்தின் நிதி நிலைகள் சிறப்பாக இருக்கும் காரணத்தால் நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது
இதன் மூலம் இப்புதிய நிதிதிரட்டும் திட்டத்தின் மூலம் இவ்வங்கியின் கடன் அளிக்கும் அளவுகள் அதிகரித்துத் தொடர்ந்து லாபத்தில் வளர்ச்சி ஏற்படும் எனத் தெரிகிறது.
24,000 கோடி ரூபாயில் 8500 கோடி ரூபாய் எச்டிஎப்சி லிமிடெட் நிறுவனத்தின் வங்கி பரிமாற்றத்தின் வாயிலாகத் திரட்ட முடிவு செய்துள்ளது. மீதமுள்ள நிதியைப் பத்திரங்கள் வெளியீட்டு வாயிலாகத் திரட்டும் எனவும் எச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது.