புஸ்வானம் ஆன 2ஜி வழக்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி உட்படக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் பெரும் சூறாவளியை ஏற்படுத்திய ஊழல் இது என்று கூறப்பட்டு வந்தது. 2ஜி அலைக்கற்றை உரிமத்தை சட்டவிரோதமாகத் தனியார் நிறுவனங்களுக்கு மிகமிகக் குறைந்த விலையில் தாரை வார்த்ததாகவும் ரூ.176,000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது என்றும் அதில் முக்கியப் பங்கு ஆ ராசா அவர்களுக்கு உள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

புஸ்வானம் ஆன 2ஜி வழக்கு..!

இந்த ஊழலில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராசா, திமுகத் தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, மனைவி ராஜாத்தி உள்படப் பலர் சிபிஐ அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.

தற்போது டெல்லி சிபிஐ நீதிமன்றம் 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை முன்னிட்டு நீதிமன்றம் அருகே திமுகத் தொண்டர்கள் வெடி வெடித்தற்கும் முழக்கமிட்டும் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A Rasa Kanimozhi and others in 2G cases are released

A Rasa Kanimozhi and others in 2G cases are released
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X