நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷ்னல் வங்கி 10 கோடி ரூபாய் வரையிலான குறுகிய கால வைப்பு நிதி மீதான வட்டியை அதிகரித்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது, இதன் மூலம் குறுகிய வைப்பு நிதி திட்டத்தைத் தேடுபவர் பிஎன்பி வங்கியால் அதிகளவில் ஈர்க்கப்படுவார்கள்.
வட்டி உயர்வு
பஞ்சாப் நேஷ்னல் வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் படி, 10 கோடி ரூபாய் வரையிலான தொகைக்கான டேம் டெப்பாசிட் அதாவது குறுகிய கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை 1.25 சதவீகம் வரையில் உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
1 கோடி ரூபாய்
இதன் படி 1 கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்பு நிதிக்கான வட்டியை 1.25 சதவீதம் வரையில் உயர்த்தி 5.25 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, தற்போது இதன் அளவு 4 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் முதிர்வு காலம் 7 முதல் 29 நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
30-45 நாள் காலம்
அதேபோல் 30-45 நாள் முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதியின் வட்டியை 4.50 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிற வைப்பு நிதி திட்டங்கள்
46-90 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட திட்டத்திற்கு 6.25 சதவீதமாகவும்,91-179 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட திட்டத்திற்கு 6.25 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1-10 கோடி ரூபாய் அளவிலான வைப்பு நிதிக்கு 4.8 சதவீதம் வட்டி விகிதத்தை உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு வருட முதிர்வு காலம்
மேலும் ஒரு வருட முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிக்கு 5 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
1 -3 வருடம் வரையில் முதிர்வு காலம் கொண்ட திட்டத்திற்கு 5.5 சதவீதமாகவும், 3 -10 வருடம் வரையிலான முதிர்வு காலம் கொண்ட திட்டத்திற்கு 5.25 சதவீதமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.