அமெரிக்காவில் எச்-1பி விசா பயன்படுத்திப் பணிபுரிந்து வருபவர்களுக்கு அடுத்தடுத்து டிரம்ப் தலைமையிலான அரசு சிக்கலை ஏற்படுத்தி வரும் நிலையில் தபோது அமெரிக்கப் பொருட்களை வாங்குங்க, அமெரிக்கர்களைப் பணிக்கு எடுங்கள் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருவதால் இந்திய ஐடி வல்லுநர்களுக்குத் தலைவலியாக மாறியுள்ளது.
அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு எச்1-பி விசா முறையில் ஏற்படுத்தி வரும் திருத்தங்களால் 5,00,000 இந்தியர்கள் நாடு திரும்பும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மகேந்திரா
மகேந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மகேந்திரா அப்படி இரு நிலை ஏற்பட்டால் 'ஸ்வாகதம், இந்தியாவிற்கு உங்களை வரவேற்கிறேன்' என்று டிவிட் போட்டுள்ளார்.
க்ரீன் கார்டு
வெளிநாடுகளில் இருந்து சென்று அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் பலரின் க்ரீன் கார்டு கோரிக்கைகள் நிலுவையில் இருக்கும் நிலையில் டிரம்ப் தலைமையிலான அரசு அவர்களை வெளியேற்றும் முடிவில் உள்ளதா செய்திகள் வெளியான அடுத்த நாலே ஆனந்த் மகேந்திரா போட்ட டிவிட்டானது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
காலக்கெடு
க்ரீன் கார்டுக்கு விண்ணப்பித்து நிலுவையில் உள்ள இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டவர்கள் அதிகபட்சம் இரண்டு முதல் மூன்று வருடங்கள் வரை அமெரிக்காவில் இறுக்கு புதிய சட்டம் வழிவகுக்கும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலைவாய்ப்பு
அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை அதிகப்படியாக உருவாக்க ஆயிரம் கணக்கில் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பை அமெரிக்கா, ஹைர் அமெர்க்கா
அமெரிக்கத் தயாரிப்புகளை வாங்குக, அமெரிக்கர்களைப் பணிக்கு எடுக என்ற வாசகத்தின் கீழ் வெளிநாட்டினருக்கான அமெரிக்காவில் வேலை செய்வதற்கான எச்1-பி விசா சேவையில் பல விதமான மாற்றங்கள் நிகழ உள்ளது.