வரும் நிதி ஆண்டு முதல் குளிர்பானங்களின் விலை குறைய வாய்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணவு அமைச்சகம் வரும் நிதி ஆண்டில் பழரசம் சார்ந்த குளிர்பானங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை நீக்குமாறு நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

பழம் சார்ந்த பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களுக்குச் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி கீழ் 28 சதவீதம் மட்டும் இல்லாமல் கூடுதலாக 12 சதவீதம் செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளதால் 40 சதவீதம் வரியுடன் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.

உணவு அமைச்சகம்

உணவு அமைச்சகம்

தற்போது உணவு அமைச்சகம் வைத்துக் கோரிக்கையினை மத்திய அரசு ஏற்றால் 12 சதவீத செஸ் நீக்கப்படும் விலை குறையும் என்றும் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

2016-ம் ஆண்டுப் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களில் 2 சதவீதம் வரை பழரசங்கள் சேர்த்தால் ஏழை விவசாயிகளுக்குக் குறிப்பிட்ட அளவிளான வருவாயினை அளிக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.

கார்பனேற்றப்பட்ட பானங்கள்

கார்பனேற்றப்பட்ட பானங்கள்

அதே நேரம் கார்பனேற்றப்பட்ட பானங்கள் குடிக்க ஏற்றதல்ல என்ற கவலையும் குறையும் என்று குளிர்பான நிறுவனங்கள் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

பதஞ்சலி

பதஞ்சலி

மறு பக்கம் பதஞ்சலி நிறுவனம் பெப்ஸி கோக் போன்ற குளிர்பான நிறுவனங்கள் அதிகப்படியான சர்க்கரையினைப் பயன்படுத்துவதால் இதை அருந்துபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வர அதிக வாய்ப்புள்ளதாக மத்திய அரசிடம் விவாதித்து வருகிறது. இதில் யாருடைய கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கும் என்று பொருத்து இருந்து பார்ப்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2018: Aerated fruit drinks likely to get cheaper

Budget 2018: Aerated fruit drinks likely to get cheaper
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X