உச்ச நீதிமன்றம் உத்தரவை மீறியதால் 125 கோடி ரூபாயினை டெபாசி செய்யுங்கள் இல்லை என்றால் திகார் சிறைக்குச் செல்லுங்கள் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேட்டு ஜேபி அசோசியேட்ஸ் நிறுவனம் ஆடிப்போயுள்ளது.
வீடு கட்டி தருவதாக வாடிக்கையாளர்களிடம் பணத்தினை வாங்கிய பிறகு குறித்த நேரத்தில் வீட்டினை கட்டித்தர முடியாமல் ஜேபி அசோசொயேட்ஸ் திணறி வந்துள்ள நிலையில் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.
வழக்கை விசாரித்து நீதிபதிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டிய 2,000 கோடி ரூபாயினை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
அதில் முதல் தவணையான 125 கோடி ரூபாயினை 2018 ஜனவரி 25-ம் தேதிக்குள் நீதி மன்றத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டு இருந்தும் மீண்டு காலக்கெடுவை நீக்குமாறு ஜேபி அசொசியேட்ஸ் கோரிக்கை வைத்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் பணத்தினை டெபாசிட் செய்ய வேண்டும் இல்லை என்றால் திகார் சிறை தான் என்று கூறியுள்ளது.