வருகின்ற பட்ஜெட் கூட்டத்தில் கிராஜூவிட்டி மசோதாவானது நிறைவேற வாய்ப்புகள் உள்ளதாகவும், இதன் மூலம் முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் சார்ந்த ஊழியர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை கிராஜூவிட்டி கிடைக்கும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
கிராஜூவிட்டி
தற்போது முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேலாக ஒரு ஊழியர் பணிபுரிந்த பிறகு நிறுவனத்தினை விட்டு வெளியேறுகின்றார் என்றால் 10 லட்சம் ரூபாய் வரை அவருக்கு வரி விலக்குடன் கிராஜூவிட்டி கிடைத்து வந்தது.
தனியார் நிறுவன ஊழியர்கள்
மத்திய அரசு பொதுத் துறை நிறுவன ஊழியர்கள் மட்டும் இல்லாமல் தனியார் நிறுவன ஊழியர்களுக்குக் கிராஜூவிட்டியினை 20 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற தொழிலாலர் சங்கத்தின் கோரிக்கையினைப் பரிசீலித்துவருகிறது.
பட்ஜெட் 2018
மத்திய அரசு சென்ற மாதம் நடைபெற்ற குளிர்காலக் கூட்டத்தில் இதற்கான மசோதாவினை தாக்கல் செய்தது. அப்போது இது வெற்றிகரமாக நிறைவேறியிருந்தால் மீண்டும் இதனைப் பட்ஜெட் கூட்டத்தில் வரி விலக்கு கிராஜூவிட்டி குறித்து அறிவிப்பு ஏதும் இருக்காது.
7வது சம்பள கமிஷன்
7வது சம்பள கமிஷன் அமலுக்கு வந்த பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 லட்சம் ரூபாயாக இருந்த கிராஜூவிட்டியானது 20 லடசம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.