இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் 6 காலாண்டுகளாக அதாவது ஜியோவின் அறிமுகத்திற்குப் பின்பு தொடர்ந்து லாபத்தில் சரிவை மட்டுமே சந்தித்து வருகிறது.
முகேஷ் அம்பானி தலைமைவகிக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ அறிமுகம் மற்றும் மலிவான கட்டண சேவை உடன் போட்டி போடும் வகையில், ஏர்டெல் ஜியோவிற்கு இணையாகக் கட்டணத்தைக் குறைத்து சேவையை அளிக்கத் துவங்கியது.
இதனால் வருவாயிலும் லாபத்திலும் ஏர்டெல் கடுமையாகப் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.
டிசம்பர் காலாண்டு
இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான சுனில் மிட்டல் தலைமை வகிக்கும் பார்தி ஏர்டெல் நிறுவனம் டிசம்பர் காலாண்டில் லாபத்தில் 11 சதவீத சரிவை சந்தித்து லாபத்தின் அளவு 306 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
இக்காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் 359 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கணிப்பை விடக் குறைவான அளவைப் பதிவு செய்துள்ளது.
வருவாய்
செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் டிசம்பர் காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் அளவு 6.7 சதவீத குறைந்து 20,320 கோடி ரூபாயாக உள்ளது.
சராசரி வருவாய்
மேலும் ஏர்டெல் நிறுவனத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் மூலம் சராசரியாக 123 ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுகிறது.
இண்டர்கணெக்ஷன் சார்ஜ் குறைக்கப்பட்ட காரணத்தால் சராசரி வருவாய் அதிகளவில் குறைந்துள்ளது.
பங்கு மதிப்பு
இன்றைய வர்த்தக முடிவில் பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் 1.17 சதவீதம் வரையில் குறைந்து 494.50 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.