பட்ஜெட் அறிக்கையில் இந்திய போக்குவரத்து துறையை மாற்றி அமைக்கப்போகும் மிகப்பெரிய திட்டமாகக் கருதப்படும் கோல்டன் குவாட்ரிலேட்டர் திட்டத்தில் எஞ்சியுள்ள 4 பெரு நகரங்களை இணைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
4 முக்கிய நகரங்கள்
2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களை அதிவேக நெட்வொர்க் வழிப்பாதையில் இணைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ளது.
கோல்டன் குவாட்ரிலேட்டர்
கடந்த நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில் கோல்டன் குவாட்ரிலேட்டர் திட்டத்தின் இரு முணைகளான டெல்லி - மும்பை மற்றும் டெல்லி - ஹவ்ரா ஆகிய பகுதிகளை இணைக்கும் 11,189 கோடி ரூபாய் மற்றும் 6,875 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் பெற்றது.
4 முனை இணைப்பு
தற்போது மீதமுள்ள 4 முனை இணைப்பான டெல்லி- சென்னை, சென்னை- ஹவ்ரா, சென்னை - மும்பை, ஹவ்ரா - மும்பை ஆகிய முனைகளை அதிகவேக அதாவது மணிக்கு 160 முதல் 200 கிலோமீட்டர் வேகம் செல்லும் ரயில் பாதை மூலம் அமைக்க உள்ளது மத்திய அரசு
40,000 கோடி ரூபாய்
பட்ஜெட் அறிக்கையில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ள இந்த 4 முனை இணைப்பிற்குச் சுமார் 40,000 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் செலவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
50 சதவீதம்
கோல்டன் குவாட்ரிலேட்டர் திட்டம் முழுமையடைந்தால் மெட்ரோ நகரங்களுக்குச் செல்லும் நேரம் கிட்டத்தட்ட 50 சதவீதம் வரையில் குறையும்.