2017-ம் ஆண்டு ஜூலை 1 முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி ஆட்சி முறை அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு இறக்குமதி மற்றும் நிகர ஏற்றுமதியானது உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 2017-2018 நிதி ஆண்டில் இறக்குமதி மற்றும் நிகர ஏற்றுமதி இரண்டு சரிவை சந்தித்துள்ளது எனப் பொருளாதார அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்றுமதி
சில வருடங்களாக ஏற்றுமதி சரிந்து இருந்த நிலையில் 2016-2017 நிதி ஆண்டில் நேர்மறைக்குத் திரும்பியது. 2017-2018 நிதி ஆண்டில் இது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை.
வரும் ஆண்டிற்கான நிகழ்ச்சி நிரல்
வரும் ஆண்டிற்கான நிகழ்ச்சி நிரல் - ஜிஎஸ்டியை உறுதிப்படுத்துதல், TBS நடவடிக்கைகளை நிறைவுசெய்தல், ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்குதல் மற்றும் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி அச்சுறுத்தல்களைத் தடுப்பது குறித்த முடிவுகளை எடுக்கும் என்று பொருளாதாரச் சர்வேயில் கூறியுள்ளனர்.
பொருளாதாரத்தினை நிர்வகிப்பது
வரும் ஆண்டுகளில் பொருளாதாரத்தினை நிர்வகிப்பது என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும்.
சிறப்பு பக்கம்
பட்ஜெட் குறித்து அனைத்து முக்கியமான செய்திகளும் தெரிந்துகொள்ளத் தமிழ் குட்ரிட்டன்ஸ்-இன் சிறப்பு பக்கத்தை பாருங்கள்.