இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக்கடன் நிறுவனமாக இருக்கும் எச்டிஎப்சி 2017ஆம் நிதியாண்டில் 3வது காலாண்டில் சுமார் 3 மடங்கு அதிக லாபத்தைப் பெற்றுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
3வது காலாண்டு
டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் எச்டிஎப்சி நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 5,670.21 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் லாப அளவு 1,701.21 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிகப்படியான லாபம்
இக்காலாண்டில் பெற்ற லாபம் அளவான 5,670.21 கோடி ரூபாய், தனது வரலாற்று அளவான 5,25031 கோடி ரூபாய் விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்..?
எச்டிஎப்சி வங்கி இக்காலாண்டில் தனது காப்பீட்டுக் கிளை நிறுவனமான எச்டிஎப்சி ஸ்டாண்டர்டு லைப் இன்சூரன்ஸ் கிளையில் இருந்து சுமார் 3,675 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்பனை செய்துள்ளது. இதன் வாயிலாகவே அதிகளவிலான லாபத்தை அடைந்துள்ளது.
வருவாய்
இக்காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 8,667.15 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, இது கடந்த நிதியாண்டில் 8,133.78 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வராக்கடன்
செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வராக்கடன் அளவு 1.14 கோடி ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 0.01 சதவீதம் அதிகரித்து 1.15 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வட்டி வருமானம்
இந்நிறுவனத்தின் வட்டி வருமானம் மட்டும் இக்காலாண்டில் 3,122 கோடி ரூபாய் அளவிற்குப் பெற்றுள்ளது, இது கடந்த நிதியாண்டில் 2,848 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகத்தில் எச்டிஎப்சி நிறுவனப் பங்குகள் சுமார் 3.28 சதவீதம் வரையில் உயர்ந்து 1965 ரூபாய் என்ற நிலையை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.