இந்தியா, மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு, மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கப் பணியிலேயே அதுநாள் வரை மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளது என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. ஆனால் அடுத்தகட்டத்திற்குச் செல்ல அதாவது வல்லரசு கனவு கொண்ட இந்தியா முக்கியமான ஒன்றில் கவனம் செலுத்த தவறி வருகிறது. அதுவும் 20 வருடங்களாக.
ஆம், கடந்த 20 வருடங்களாக மத்திய அரசு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு (R&D) உலக நாடுகளை விடவும் மிகவும் குறைவான அளவிலேயே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
கடந்த 20 வருடங்களாக நாட்டின் மொத்த ஜிடிபி அளவில் வெறும் 0.6 முதல் 0.7 சதவீதம் வரையில் தான் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. இது அமெரிக்கா, சீனா, தென் கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை விடவும் குறைவாகும்.
இரட்டிப்பு
இந்தியாவை வல்லரசு நாடுகளுக்கு இணையாக வளர்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக அறிவியல் மற்றும் R&D மத்திய அரசு தற்போது அளிக்கும் நிதியுதவையை இரட்டிப்புச் செய்து இத்துறைகளின் மீதான கவனத்தை அதிகரிக்க வேண்டும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு
மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் ஸ்டார்ட்அப் துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில் எதிர்கால இந்தியாவை உருவாக்கும் வகையில் R&D துறையில் முதலீட்டை இந்தப் பட்ஜெட் அறிக்கையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதிஒதுக்கீடு
இந்தியா R&D துறையில் நாட்டின் மொத்த ஜிடிபியில் 0.6 சதவீதம் மட்டுமே செலவு செய்யும் நிலையில், அமெரிக்கா 2.8 சதவீதமும், சீனா 2.1 சதவீதமும், இஸ்ரேல் 4.3 சதவீதமும், கொரியா 4.2 சதவீதமும் செலவு செய்து உயர்ந்து நிற்கிறது.
வல்லரசு
R&D துறையில் செய்யப்படும் முதலீட்டின் வாயிலாக ஒரு நாட்டின் பொருளாதாரம் மட்டும் அல்லாமல் வல்லரசு நாடாக உருவாகும் சந்தர்ப்பமும் உருவாகும் எனப் பல்வேறு ஆய்வுகள் கூறுகிறது.
நியூஸ்லெட்டர்
தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்துடன் எப்போதும் இணைந்திருக்கும் வகையில் தொடர்ந்து முதலீட்டுக்கான டிப்ஸ், வர்த்தகச் சந்தை, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, ஈகாமர்ஸ், மியூச்சுவல் பண்ட் போன்ற அனைத்து விதிமானச் செய்திகளை நியூஸ்லெட்டர் வாயிலாகப் பெறலாம்.