2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பங்குகள் மீதான நீண்ட கால முதலீட்டில் கிடைக்கும் லாபத்திற்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மீது மிகப்பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
1 லட்சம் ரூபாய்
பொதுவாக 1 வருடத்திற்கு அதிகமான இருப்பு வைக்கப்பட்டு இருக்கும் பங்குகளை நீண்ட கால முதலீடாகப் பார்க்கப்படும். இதற்கு வரி ஏதுமில்லை.
10 சதவீத வரி
ஆனால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யப்பட்டுள்ள பங்கு முதலீட்டில் கிடைக்கும் லாபம் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் அதற்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய வரியின் பெயர் long term capital gains (LTCG) வரி.
முதலீட்டாளர்கள்
long term capital gains (LTCG) வரியாக 10 சதவீதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில்
இந்திய சந்தையில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை உடனடியாக விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அன்னிய முதலீடு
அதுமட்டும் அல்லாமல் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்வதும் குறைந்து விடும்.
மும்பை பங்குச்சந்தை
இந்த அறிவிப்பினால் மும்பை பங்குச்சந்தை தற்போது மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
மோடியின் வெற்றி
15 மாதத்தில் பொதுத் தேர்தல் இருக்கும் நிலையில் long term capital gains (LTCG) tax எனப்படும் புதிய வரியை அறிவிப்பதன் மூலம் மோடி அரசுக்கு வெற்றி வாய்ப்புகள் குறைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
பங்குச்சந்தை வளர்ச்சி
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சென்செக்ஸ் குறியீடு சுமார் 28 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்து, உலகச் சந்தைகளில் அதிகப்படியான வளர்ச்சியைச் சந்திக்கும் நாடாக மும்பை பங்குச்சந்தை உருவெடுத்துள்ளது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டும் கடந்த 1 வருடத்தில் 19 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளில் முதலீடு செய்துள்ளனர்.
2017 அற்புதம்
இந்திய பங்குச்சந்தை மீதும், இந்திய சந்தை மீதும் முதலீட்டாளர்களுக்கு அதிகளவிலான நம்பிக்கை வளர்ந்த காரணத்தால் 2017ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்து வருகிறது.
சென்செக்ஸ்
அதிலும் குறிப்பாகச் சென்செக்ஸ் குறியீடு 34,000 புள்ளிகளில் வெகு குறைவான காலத்தில் 36,000 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் செய்து வருகிறது. இந்த வளர்ச்சிக்குக் காரணமாக முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தும் வகையில் மத்திய அரசு முக்கியமான ஒரு அறிவிப்பை விதிக்க உள்ளதாகத் தெரிகிறது. இது நிறைவேறும் பட்சத்தில் சென்செக்ஸ் 3000 புள்ளிகள் வரையில் சரிய வாய்ப்புகள் உண்டு.
மியூச்சுவல் ஃப..." data-gal-src="http:///img/600x100/2018/02/mutualfunds3-1517470083.jpg">