இன்றை பட்ஜெட்டில் நீண்ட காலப் பங்கு சந்தை சார்ந்த முதலீடுகள் மூலமாகக் கிடைக்கும் லாபத்துக்கு 10 சதவீத வரி விதித்துள்ள நிலையில் ப்மியூச்சுவல் ஃபண்டில் எவ்வளவு முதலீடு செய்து அதன் மூலம் பெறப்படும் வருவாய்க்கு 10 சதவீத வர வரும் நிதி ஆண்டில் இருந்து விதிக்கப்படும் என்று அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இதனால் மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்கள் ஒரு பக்கம் அதிர்ச்சி அடைந்துள்ளது மட்டும் இல்லாமல் பிற்பகள் 12:51 மணி நிலவரத்தின் படி மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 0.61 சதவீதம் என 173.73 புள்ளிகள் சரிந்து , நிப்டி 0.78 சதவீதம் என 85.60 புள்ளிகள் சரிந்து 10,941.20 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் மீது வரி விதித்துள்ளதால் 2018 டிசம்பர் மாதத்திற்கு 34,000 புள்ளிகளாகச் சென்செக்ஸ் சரியும் என்றும், நிப்டி 10000 புள்ளிகளாகச் சரியும் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.