சென்னை: பெரம்பூரில் ஏற்கனவே ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலை உள்ள நிலையில் புதிதாக அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும் ரயில்வே துறைக்கு ரூ1.48 லட்சம் கோடி ஒதுக்கப்படும் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
வைஃபை வசதி
நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் வைவை வசதி ஏற்பாடு செய்யப்படும். அனைத்து ரயில்களிலும் வைபை வசதி, சிசிடிவி பொருத்தப்படும்.
புதிய ரயில் பாதைகள்
4000 கிலோ மீட்டர் தொலைவிற்குப் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். 18,000 கி.மீ. நீளத்துக்குப் புதிய இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்படும்.
கட்டுமான வசதிகள்
25,000 பேருக்கு அதிகமாகப் பயன்படுத்தும் அனைத்து ரயில் நிலையங்களிலும் எஸ்கலேட்டர்கள்.
சிசிடிவி
சென்னையில் நடந்த கொடுரத்திற்குப் பின்பு இந்திய ரயில்வே துறையில் கண்காணிப்பு அவசியமாகியுள்ளது. ரயில் நிலையங்கள், ரயில்களில் பயணம் செய்யும் போது பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
மெட்ரோ
பெங்களூருவில் ரூ.17,000 கோடியில் புறநகர் ரயில் சேவை அமைக்கப்படும். மும்பை ரயில் நெட்வொர்க்கிற்கு 11,000 கோடி ஒதுக்கீடு.