மத்திய அரசுகள் கடந்த சில ஆண்டுகளாகத் தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பம் துறையில் மட்டுமே அதிகளவிலான கவனத்தைச் செலுத்தி வரும் நிலையில், மாறுபட்ட முறையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் விவசாயம் துறை சார்ந்த திட்டங்களுக்கு அதிகளவிலான முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
பசுமை திட்டம்
இந்தியாவைப் பசுமையாக்கும் திட்டமான ஆபரேசன் க்ரீன் திட்டத்துக்குத் தனிப்பட்ட முறையில் 500 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
மூங்கில் பயிரிடுவோர் மற்றும் மீனவர்கள்
மூங்கில் பயிரிடுவோருக்கும் மத்திய அரசின் உதவிகள் நீட்டிக்கப்படும், விவசாயிகளுக்கான கடன் அட்டைத் திட்டம் மீனவர்கள், கால்நடை வளர்ப்போருக்கும் விரிவாக்கம்.
விவசாயக் கடன்
2018-19ஆம் ஆண்டில் வேளாண்மை துறையை வளர்ச்சி அடையச் செய்ய வழங்கப்படும் விவசாயக் கடன் இலக்கு ரூ11 லட்சம் கோடியாக உயர்த்தவும் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி
நாட்டின் ஏற்றுமதி அளவுகள் அதிகளவில் குறைந்துள்ள நிலையில் விவசாய ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விவசாய ஏற்றுமதி 100 பில்லியன் டாலர் மதிப்பை எட்டும்.
மீன் வளர்ப்பு
மீன் வளர்ச்சித்துறைக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு
நித்தி அயோக்
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க நிதி ஆயோக் அதிகக் கவனம் செலுத்தும் என்றும் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நியூஸ்லெட்டர்
தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்துடன் எப்போதும் இணைந்திருக்கும் வகையில் தொடர்ந்து முதலீட்டுக்கான டிப்ஸ், வர்த்தகச் சந்தை, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, ஈகாமர்ஸ், மியூச்சுவல் பண்ட் போன்ற அனைத்து விதிமானச் செய்திகளை நியூஸ்லெட்டர் வாயிலாகப் பெறலாம்.