கடந்த சில ஆண்டுகளாக இந்திஅயவில் ஆதார் எண் பயன்பாடு என்பது மிக அதிகமாகியுள்ளது. தொட்டதற்கு எல்லாம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசுடன் சேர்ந்துகொண்டு உச்ச நீதிமன்றமும் தீர்ப்புகளை ஆதாருக்குச் சாதகமாக வழங்கியுள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் தனியுரிமை பற்றித் தெரிந்துகொள்வதை விடச் சர்வதேச தொழில்னுட்ப்ப ஹேக்கர்களிடம் இருந்து எப்படித் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று வல்லுனர்கர்கள் கூறிவருகின்றனர்.
அமெரிக்கச் செய்தியாளரான தாமஸ் ஃபிரைடுமேன் ஆதார் சமந்தமான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பல முக்கியத் தகவல்களைக் கூறினார். இவை உன்மை தான் என்றாலும் மக்களுக்கு ஆதார் மேல் தான் அதிகக் கோபம் உள்ளது. எனவே இந்தக் கூட்டத்தில் ஆதார் பாத்காப்புக் குறித்துத் தாமஸ் ஃபிரைடுமேன் என்னவெல்லாம் கூறினார் என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
ஆதார்
ஆதார் திட்டத்தினைக் கண்டு வியப்படைகிறேன் என்றும், இது ஒரு மிகப் பெரிய கண்டுபிடிப்பு என்றும் கூறியுள்ளார்.
தனியுரிமை
இந்திய சமுகமானது இதுபோன்ற ஒன்றிணைக்கப்பட்ட திட்டத்தினை நம்பி ஆதரிக்க வேண்டும். தனியுரிமை குறித்து வரும் விமர்சனங்கள் எல்லாம் போலியானவை என்றும் கூறினார்.
தரவுகள்
ஆதார் தொழில்நுட்பமானது உங்களது பையோமெர்ட்ரிக் விவரங்களைத் தவிர வேறு எதையும் சேமித்து வைத்துக்கொள்ளாது. எனவே யாரையும் டிராக் செய்யாது அதாவது பின்தொடராது என்றார்.
பேஸ்புக்
இன்றைய தொழில்நுட்ப உலகில் பேஸ்புக் தான் உங்களை டிராக் செய்கிறது. தனியுரிமை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால் கூகுள், பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை முதலில் பயன்படுத்தக்கூடாது என்றும் இவை தான் உங்களது இந்திய அரசை விட அதிகமாக டிராக் செய்கின்றன என்றும் தாமஸ் ஃபிரைடுமேன் கூறினார்.