மும்பை: பொதுத் துறை வங்கி நிறுவனமான யூனியன் பாங்க் ஆப் இந்தியா சனிக்கிழமை தனது மூன்றாம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. அதில் 125 கோடி ரூபாய் நிகர நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 31-ம் தேதியுடன் முடியும் மூன்றாம் காலாண்டில் சென்ற ஆண்டு 104 கோடி ரூபாய் லாபத்தினை யூனியன் வங்கி பெற்று இருந்தது.
செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் 12.35 சதவீதமாக இருந்த வரா கடனும் 13.03 சதவீதமாக மூன்றாம் காலாண்டில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதுவே சென்ற ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 11.70 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை இந்திய பங்கு சந்தை முடியும் போது யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் பங்குகள் 3.66 சதவீதம் என 4.85 புள்ளிகள் சரிந்து 127.60 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.