ஒரு நிறுவனத்தின் முடிவுகள் வெளியாகும் முன்பே அதனை மறைமுகமாகத் தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்கும் மிகப்பெரிய மோசடிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்தியாவில் இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே இருந்த நிலையில், சமீப காலமாக இது அதிகரித்து வருகிறது.
இப்படிப்பட்ட மோசடி குறித்த விசாரணையை தான் தற்போது செபி கையில் எடுத்துள்ளது.
தரவுகள்
இப்படிச் சேகரிக்கப்பட்ட தகவல்கள் வாட்ஸ்அப் மூலம் முதலீட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் செபி கண்டுப்பிடித்துள்ளது. இந்த மோசடியின் விசாரணை முடங்கிக்கிடந்த நிலையில் தற்போது முன்னேற்றம் வந்துள்ளது.
வாட்ஸ்அப்-இல் வெளியிடப்பட்ட தகவல்கள் மோசடியாளர்கள் டெலிட் செய்துவிட்டனர். இப்படி அழிக்கப்பட்ட தகவல்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் செபி ஈடுபட்ட நிலையில் தற்போது தகவல்களை மீட்டு எடுத்துள்ளதாகச் செபி தெரிவித்துள்ளது.
ஒப்பீடு
மீட்டு எடுக்கப்பட்ட தகவல்களை, செபி இதற்கு முன்னர்ச் சேகரித்த தகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து மோசடியாளர்களைக் கண்டுபிடிக்கப்பட உள்ளதாகப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆக்சிஸ் வங்கி
டிசம்பர் 27,2017இல் செபி ஆக்சிஸ் வங்கிக்கு எதிராக இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவில் செபி வங்கியில் உள்விசாரணை செய்யுமாறு கூறியது. நிறுவனத்தின் அறிக்கை தயாரிப்பில் இருந்தோர், முக்கியத் தகவல்களைப் பெறும் அளவிற்கு வாய்ப்புக் கொண்ட நபர்களை வங்கி வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை செய்யும் படி உத்தரவிட்டது.
காத்திருப்பு..
இந்த விசாரணையின் முடிவு மற்றும் அதன் அறிக்கைக்காகச் செபி தற்போது காத்திருக்கிறது.
முக்கியமான நிறுவனங்கள்
ரெயூட்டர் ரிப்போர்ட் அடிப்படையில் துவங்கப்பட்ட இந்த மோசடி குறித்த விசாரணையில் டாக்டர் ரெட்டி நிறுவனத்தின் முடிவுகளின் தகவல்கள் வெளியாகி அதிக முதலீடு செய்யப்பட்டு மோசடியாளர்கள் அதிக லாபம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.
பிற நிறுவனங்கள்
இந்த மோசடியில் டாக்டர் ரெட்டி நிறுவனம் மட்டும் அல்லாமல் சிப்லா, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், விப்ரோ, பஜாஜ் பைனான்ஸ், மஹிந்திரா ஹாலிடேஸ், கிராம்ப்டன் கிரிவீஸ் ஆகிய நிறுவனங்களும் மோசடியாளர்களிடம் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.