32சதவீத பணத்தை இழந்த முன்னணி பங்கு முதலீட்டாளர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை பங்குச்சந்தையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் சரிவின் உச்சக்கட்டமாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 1300 புள்ளிகளை இழந்துள்ளது.

 

இந்த அதிரடி சரிவில், சராசரி பங்கு முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் முன்னணி முதலீட்டாளர்களான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, ஆஷிஷ் கசோலியா மற்றும் டோலி கண்ணா ஆகியோரும் அதிகளவிலான பணத்தை இழந்துள்ளனர்.

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

இன்றைய வர்த்தகத் துவக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1,000 புள்ளிகள் வரையிலான சரிவை சந்தித்து, அதிகப்படியாக 1,350 புள்ளிகள் வரையிலான சரிவை பதிவு செய்தது.

இதேபோல் நிஃப்டி குறியீடு அதிகப்படியாக 400 புள்ளிகள் வரையில் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

 

32 சதவீத வீழ்ச்சி

32 சதவீத வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தில் மட்டும் முன்னணி பங்கு முதலீட்டாளர்கள் சராசரியாகச் சுமார் 32 சதவீத பணத்தை இழந்துள்ளனர்.

பங்கு முதலீட்டாளர்களின் நிலை

பங்கு முதலீட்டாளர்களின் நிலை

இன்றைய சரிவிற்குப் பின் பலவீனமான முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குச்சந்தையை விட்டு வெளியேறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, அதேபோல் நீண்ட கால முதலீட்டாளர்கள் சரிவை தாண்டியும் பங்கு இருப்புகளை வைத்திருப்பார்கள் எனத் தெரிகிறது.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
 

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

2018ஆம் ஆண்டில் மட்டும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வின் பங்கு மதிப்பு 32 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.

ஆப்டெக் 34% சரிவு, ப்ரோஜோன் 27% சரிவு, ஜியோஜிட் பைனான்சியல் சர்வீசஸ் 27% சரிவு, எம்சிஎக்ஸ 27.12% சரிவைச் சந்தித்துள்ளது.

அதேபோல் ஆட்டோ லைன் இண்டஸ்ட்ரீஸ், பெடரல் வங்கி, ஓரியன்ட் சிமெண்ட் ஆகிய நிறுவனங்கள் 24 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.

 

டோலி கண்ணா

டோலி கண்ணா

இதேபோல் டோலி கண்ணா போர்ட்போலியோவில் இருக்கும் ஸ்டெர்லிங் டூல்ஸ் 19% சரிவு, துவாரிகேஷ் சுகர் 20% சரிவு, நந்தன் டெனிம் 21% சரிவு, எம்கே குளோபல் பைனான்சியல் சர்வீசஸ் 20% சரிவு, ரூசிரா பேப்பர் 19% சரிவு, மணப்புரம் பைனான்ஸ் 21% சரிவு, ஜிஎன்எப்சி 19% சரிவு, ரெயின் இண்டஸ்ட்ரீஸ் 18% சரிவு மற்றும் ஐஎப்பி அக்ரோ 25 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.

ஆஷிஷ் கசோலியா

ஆஷிஷ் கசோலியா

ராகேஷ் போலவே முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவரான ஆஷிஷ் கசோலியா திங்கட்கிழமை Shaily Engineering Plastics நிறுவனத்தில் வைத்திருந்த 2,95,000 பங்களை விற்றுவிட்டு வைபவ் குளோபல் நிறுவனப் பங்குகளை வாங்கினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ace investors lose up to 32percent in this selloff

Ace investors lose up to 32percent in this selloff
Story first published: Tuesday, February 6, 2018, 13:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X