2017ஆம் ஆண்டில் வெற்றி முதலீடாக இருந்த கிரிப்டோகரன்சி 2018ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளில் அடுத்தடுத்த நெருக்கடிகளால் மளமளவெனச் சரிந்தது. இதனால் இதன் முதலீட்டாளர்கள் பல ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரையிலான பணத்தை இழந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரக் காலத்தில் சர்வதேச பங்குச்சந்தைகள் அதிகளவிலான சரிவை சந்தித்த நிலையில் தற்போது கிரிப்டோகரன்சி சந்தையில் முதலீடு குவிந்து வருகிறது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் >> >
பிட்காயின்
சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் கிரிப்டோகரன்சி சந்தையின் மீது விழுந்துள்ள காரணத்தால் புதன்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 2,000 டாலருக்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.
புதன்கிழமை வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 25 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
எதிரம்
கிரிப்டோகரன்சி சந்தையில் சந்தை மூலதன படி பிட்காயினுக்கு அடுத்தாக இருக்கும் எதிரம் 25.03 சதவீதம் வரையிலான வளர்ச்சியை புதன்கிழமை வர்த்தகத்தில் அடைந்துள்ளது.
ரிப்பிள்
விலை குறைவாக இருந்தாலும் கடந்த சில மாதங்களில் அதிகளவிலான முதலீட்டாளர்களை ஈர்த்த ரிப்பிள் புதன்கிழமை வர்த்தகத்தில் சுமார் 16.80 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
பிட்காயின் கேஷ்
பிட்காயினுக்கு இணையாகப் பார்க்கப்பட்டாலும் இதன் வளர்ச்சி சற்று குறைவாகவே உள்ளது. ஆனால் இதற்கும் அதிகப்படியான முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் முதலீடு செய்து வருகின்றனர்.
புதன்கிழமை வர்த்தகத்தில் பிட்காயின் கேஷ் சுமார் 19.39 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
கார்டானோ
பிட்காயின் கேஷ் அடுத்துப் புதன்கிழமை வர்த்தகத்தில் கார்டானோ 15.61 சதவீதம் வரையிலான உயர்வை அடைந்துள்ளது.
லைட்காயின்
அதேபோல லைட்காயின் நேற்றைய வர்த்தகத்தில் 27.47 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.