சர்க்கரை மீதான இறக்குமதி வரி 100% உயர்த்த வாய்ப்பு.. விவசாயிகளுக்கு நன்மை அளிக்குமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணவு துறை அமைச்சகம் சர்க்கரை மீதான இறக்குமதி வரியை 100 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் குறைவான விலையில் சர்க்கரையினை இறக்குமதி செய்வது குறையும் என்றும் மொத்த விலை சந்தையில் குறைந்து வரும் சர்க்கரையின் விலை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை மீது வரி விதித்துள்ளதால் இந்திய கரும்பு விவசாயிகளுக்குக் கூடுதலான லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் > >

விலை

விலை

2017-2018 நிதி ஆண்டில் மொத்த விலை சந்தையில் சர்க்கரையின் விலை அதிகளவில் குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் கிலோ 40 முதல் 42 ரூபாய் வரை சர்க்கரை விற்கப்பட்டது.

 

வரி

வரி

உள்நாட்டுக் கரும்பு விவசாயிகளைக் காக்கும் படி சர்க்கரை மீதான இறக்குமதி வரியை 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

அறிவிப்பு

அறிவிப்பு

வரி உயர்வு குறித்து அறிவிப்பினை விரைவில் வெளியிட இருப்பதாக அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரம் உற்பத்தி அதிகம் என்ற காரணத்தினால் தான் விலை குறைந்துள்ளது என்றும் இது தற்காலிகமானது தான் என்றும் கூறிவருகின்றனர்.

 உற்பத்தி
 

உற்பத்தி

இந்தியாவில் சர்க்கரை உற்பத்தியானது 4 சதவீதம் என உயர்ந்து 26.1 மில்லியன் டன்னாக இருப்பதாகவும் இதுவே 2016-2017 நிதி ஆண்டில் 20.3 பில்லியன் டன்னாக் இருந்ததாகவும் தரவுகள் கூறுகின்றன.

நுகர்வு

நுகர்வு

அதே போன்று நடப்பு நிதி ஆண்டில் இதுவரை 25 மில்லியன் டன் சர்க்கரையினை மக்கள் நுகர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Food ministry proposes hike in sugar import duty to 100%

Food ministry proposes hike in sugar import duty to 100%
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X