அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் பாம்ஜா என்னும் ஒரு கிராமம் தான் ஆசியாவிலேயே மிகவும் பணக்கார கிராமம் ஆக இனி திகழும்.
இந்தத் திடீர் மாற்றத்திற்குக் காரணம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தான்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம்
இந்திய ராணுவத்தின் முக்கியப் பிரிவான டவாங் காரிசன் வீரர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் பாம்ஜா கிராமத்தில் சுமார் 200.056 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த உள்ளது.
40 கோடி ரூபாய்
இந்த நிலம் சுமார் 31 வீட்டுக்காரர்களுக்குச் சொந்தமானது என்பதால் நிலத்தை மதிப்பீடு செய்து 40 கோடி ரூபாயை, நிலத்தின் அளவிற்கு ஏற்றார் போல் பங்கீடு செய்து அதன் உரிமையாளர்களுக்குக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
31 குடும்பங்கள்
200.056 ஏக்கர் நிலத்திற்குச் சொந்தமான 31 குடும்பங்களில் 29 குடும்பங்களுக்கு 1.09 கோடி ரூபாயும், 1 குடும்பத்திற்கு 2.44 கோடி ரூபாயும், மற்றொரு குடும்பத்திற்கு அதிகப்படியான தொகையாக 6.73 கோடி ரூபாயும் மத்திய அரசு அளித்துள்ள தொகையில் பிரித்துக் கொடுக்கப்பட்ட உள்ளது.
பிமா கந்து
இம்மாநிலத்தின் முதலமைச்சர் பிமா கந்து கூறுகையில், பிரதமர் மோடியின் ஆட்சியில் அருணாச்சல பிரதேசம் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. குறிப்பாக ரயில், விமானம், சாலை இணைப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் டிஜிட்டல் சேவைகள் சிறப்பாக வளர்ச்சி அடைந்து வருவதாக அவர் கூறினார்.