வருமான வரி துறையின் கீழ் நிரந்தரக் கணக்கு எண் என்று அழைக்கப்படும் பான் எண் அளிக்கப்படுகிறது. இந்தக் கார்டு இருந்தால் வங்கி கணக்கு துவங்க முடியும் மற்றும் வருமான வரி தாக்கல் செய்ய முடியும்.
இதனால் உலகின் மிகப் பெரிய மக்கல் தொகை வைத்துள்ள இந்தியாவில் தினமும் லட்சம் கணக்கானோர் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கின்றனர்.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
வருமான வரித் துறை
வருமான வரித் துறை வாரத்திற்கு 15 முதல் 20 லட்சம் வரை பான் விண்ணப்பங்களைப் பெறுகின்றது என்றும் அதனைச் செயல்படுத்த சில மணி நேரங்கள் முதல் 15 நாட்கள் வரை தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
பான் கார்டுக்கு இரண்டு நிமிடத்தில் விண்ணப்பிக்கலாம்?
என்எஸ்டிஎல் (NSDL) மற்றும் UTIITSL இணையதளங்களில் யாருடைய உதவியும் இல்லாமல் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆதார் கார்டு பயன்படுத்தி விண்ணப்பிக்கும் போது இரண்டு நிமிடத்தில் பன் கார்டுக்கு எளிதாக விண்ணப்பிக்க முடியும்.
ஆப்லைன்
உங்கள் ஆதார் கார்டில் மொபைல் எண் இல்லை என்றால் அல்லது தவறாக இருந்தால் இணையதளம் மூலமாக விண்ணப்பத்தினை நிரப்பித் தபால் மூலமாக விண்ணப்பித்தும் பான் கார்டினை பெற முடியும்.
கட்டணம்
இணையதளம் மூலமாகப் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது குறைந்தது 107 ரூபாய் முதல் 125 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும்.
சேவை வழங்குநர்கள்
பான் எண்ணை வருமான வரித் துறை அளித்தாலும் இதனைப் பிற சேவை வழங்குநரிடம் அளித்துத் தான் கார்டினை அச்சிடுகின்றனர். எனவே சேவை வழங்குநர்கள் தாமதித்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் நிதி அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.