இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் 2,416.37 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகவும் இதுவே சென்ற ஆண்டு 2,610 கோடி நிகர லாபமாக இருந்ததாகவும் அறிவித்துள்ளது.
குறைந்த டிரேடிங் வருவாய், பத்திர திட்டங்களின் வருவாய்ச் சரிந்தது, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அதிகக் கடன் அளித்து அவை வரா கடனாக இருப்பது, கணிசமான முதலீட்டுத் தேய்மானம் போன்வற்றால் நட்டம் அதிகமாகியுள்ளது.
வரா கடன் சென்ற ஆண்டு இருந்த 1.86 கோடி ரூபாயில் இருந்து அதிகரித்து 1.99 கோடியாக உள்ளதாக மும்பை பங்கு சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
வட்டி வருவாய் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 26.88 சதவீதம் வளர்ச்சி என 18,687.57 கோடி பெற்றுள்ளதாக வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார் கூறினார்.
செயல்பாட்டு லாபமானது சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது மூன்றாம் காலாண்டில் 6.3 சதவீதம் சரிந்து 11,754.6 கோடி ரூபாயாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.