இந்தியா உட்பட அனைத்து வளரும் நாடுகளும் தற்போது டிஜிட்டல் பணப் பரிமாற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் கூகிள், பேஸ்புக் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களும் இதற்கான பிரத்தியேக சேவையை உருவாக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் ஆன்லைன் மெசேஜிங் சேவை அளிக்கும் வாட்ஸ்அப் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பாகவே வாட்ஸ்அப் மூலமாகப் பணம் அனுப்பும் வசதியை தயார் செய்யத் தொடங்கிவிட்டது. தற்போது இச்சேவை நடைமுறைக்கு வந்துள்ளது. பேடிஎம், பிம் போல இதிலும் யூபிஐ மூலமாகவே பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
தற்போது இந்த வசதி குறிப்பிட்ட சில பயன்பாட்டாளர்கள் தான் வந்துள்ளது. கூடிய விரைவில் இது அனைவரையும் சென்று அடையும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இதைப் பற்றி விளக்கும் ஒரு வீடியோ தொகுப்பு உங்களுக்காக.
வாட்ஸ்அப்க்கு அதிகப் பயனர்கள் இருப்பதால் இது பேடிஎம், கூகுள் டேஸ் மற்றும் பல மின்னணு பரிமாற்ற செயல்விகளுக்குப் பெரும் போட்டியா இருக்கும்.