அதிக விடுமுறை எடுக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு செக்...!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரயில்வே நிர்வாகம் அனுமதி இல்லாமல் விடுமுறை எடுக்கும் ஊழியர்களுக்குக் கடிவாளம் போடும் விதமாக அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

 

ரயில்வே நிர்வாகம் ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும், நேர்மையான மற்றும் ஊக்கமான மன உறுதியை மேம்படுத்தவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு படியாகவே ஊழியர்களின் பணி நீக்கம் நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.

ஊழியர்கள் பட்டியல்

ஊழியர்கள் பட்டியல்

இந்திய ரயில்வேஸ் 13,000-க்கும் அதிகமான அனுமதி இல்லாமல் நீண்ட நாட்கள் மற்றும் அதிக விடுமுறை எடுக்கும் பட்டியலை தயார் செய்துள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளவர்களைப் பணி நீக்கம் செய்ய இருப்பதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

செயல் திறன்

செயல் திறன்

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனமான ரயில்வேயில் 13 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இருக்கின்றனர். இதில் 13,000-க்கும் அதிகமான ஊழியர்கள் அதிக விடுமுறை மற்றும் நீண்ட நாட்களுக்குத் தொடர் விடுமுறையினை அனுமதி இல்லாமல் எடுப்பது மீதம் உள்ள ஊழியர்களின் செயல் திறனைக் குறைகின்றது என்றும் ரயில்வே நிர்வாகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உறுதி
 

உறுதி

எனவே இதுபோன்ற ஊழியர்களை முறையான விதிமுறைகளின் கீழ் பணி நீக்கம் செய்ய இருப்பதை ரயில்வே நிர்வாகம் உறுதியும் செய்துள்ளது.

சுற்றறிக்கை

சுற்றறிக்கை

ரயில்வே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது மட்டும் இல்லாமல் அனைத்து அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மூலமாக ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Railways going to terminate services of 13,000 ‘absentee’ employees

Railways going to terminate services of 13,000 ‘absentee’ employees
Story first published: Saturday, February 10, 2018, 10:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X