இந்திய ரயில்வே துறையை முழுமையாக மாற்றி அமைக்கும் திட்டமாகக் கருதப்படும் புல்லட் ரயில் திட்டத்தின் பெரும் பகுதி உதிரிப்பாகங்கள் அனைத்தும் ஜப்பான் நாட்டு நிறுவனத்தின் கையில் செல்கிறது என்று நாடாளுமன்றத்தின் கேள்வி எழுப்பப்பட்டது.
இதை விளக்கும் வகையில் ரயில்வே துறை நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
கேள்வி..
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தில் 70 சதவீத பாகங்கள் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களுக்குச் செல்வதாகக் குழப்பம் ஏற்பட்ட நிலையில், நாடாளுமன்றத்திலும் இதுகுறித்துக் கேள்வி எழுப்பட்டது.
ராஜன் கோஹெயின்
இதற்கு விளக்கும் அளிக்கும் விதமாக ரயில்வே துறை அமைச்சரான ராஜன் கோஹெயின், இந்த மொத்த திட்டத்தில் 20 சதவீதத்திற்கும் குறைவான அளவிலான பொருட்களின் ஆர்டர்கள் மட்டுமே ஜப்பான் நாட்டு நிறுவனங்களுக்குச் செல்கிறது.
18.6சதவீதம்
மொத்த புல்லட் ரயில் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் வெறும் 18.6 சதவீதம் தொகை மதிப்பிலான பொருட்கள் மட்டுமே ஜப்பான் நிறுவனங்களுக்குச் செல்கிறது.
இத்திட்டத்துடன் மேக் இன் இந்தியா இணைந்துள்ள காரணத்தால் 80 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது.
கூட்டணி
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் இந்தியாவில் அமைக்கப்பட உள்ள நிலையில் இத்திட்டத்தில் மேக் இன் இந்தியா மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ..." data-gal-src="http:///img/600x100/2018/02/bullettrain412654-1518348888.jpg">என்ன காரணம்..?