இந்தியாவில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் வேலைவாய்ப்பு அதிகளவில் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தச் சரிவில் இருந்து மீண்டு வருகிறது.
இணையம் வழியாக வேலைவாய்ப்பு தேடல் மற்றும் ஆட்களை அமர்த்தும் பணிகள் ஜனவரி மாதம் அதிகரித்துள்ளதாக வேலைவாய்ப்பு தேடல் தளமான நாக்ரி தளம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தை ஒப்பிடும் போது 2018 ஜனவரி மாதத்தில் இணைய வாயிலாக வேலைவாய்ப்புகளில் ஆட்களை அமைக்கும் பணி 14 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
நாக்ரி ஜாப் ஸ்பீக் இன்டெக்ஸ் ஜனவரி மாதத்தில் 1,951 ஆக உயர்ந்துள்ளது, இது கடந்த வருடத்தை விட 14 சதவீதம் அதிகம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாத்தில் இன்சூரன்ஸ் துறையில் 73 சதவீதமும், ஆட்டோமொபைல் துறையில் 44 சதவீதம் அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.