இந்திய எப்எம்சிஜி துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பதஞ்சலி மிகக் குறுகிய காலத்தில் விஸ்வரூப வளர்ச்சியை அடைந்துள்ளது. இது பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய போட்டியாக விளங்குகிறது.
இந்நிறுவனம் இத்துறையில் இருக்கும் சக போட்டி நிறுவங்களைப் போல் எந்த ஒரு நடிகர் நடிகைகளையோ அதன் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தவில்லை, அதற்கு மாறாக இதன் தலைவர் மற்றும் யோக குருவான பாபா ராம்தேவ் அவர்களை இந்நிறுவன பொருட்களின் விளம்பரங்களில் நடித்தார்.
இது சமானியர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வெற்றி அடைந்தது. மேலும் இந்நிறுவன பொருட்கள் இயற்கை முறையில், இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிப்பதால் மக்களை ஈர்க்க கூடுதல் வாய்ப்பைப் பெற்றது. இதுவே பதஞ்சலிக்கு மிகப் பெரிய வர பிரசாதம் அமைத்து விட்டது.
இன்றளவில் பதஞ்சலி நிறுவனத்தின் வளர்ச்சியைப் பன்னாட்டு நிறுவனங்கள் அதிர்ச்சியிலேயே உள்ளது.
இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பின் இருக்கும் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமா. வீடியோவை பாருங்க.