இந்தியாவை மட்டும் அல்லாமல் உலக வங்கிகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கியின் மிகப்பெரிய மோசடியில் புதிய திருப்பமாக அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது.
இதுவரை 1.77 கோடி ரூபாய் அளவிலான தொகையை மட்டுமே மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்பட்ட நிலையில் தற்போது 3 பில்லியன் டாலர் அளவிலான நிதி அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மோசடி
வைர வர்த்தகத்திற்காகப் பஞ்சாப் நேஷனல் வங்கி நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி ஆகிய இருவருக்கும் போலியான LoU கடிதம் அளிக்கப்பட்டுப் பல வங்கிகளின் வாயிலாக வெளிநாடுகளில் இருக்கும் கணக்குகளுக்குப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கணக்கீடு
இதுவரை 11,300 கோடி ரூபாய் அளவிலான தொகை மட்டுமே பஞ்சாப் நேஷனல் வங்கி ஒப்புதல் பெயரில் நிதி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது எனப் பேசப்பட்டு வந்த நிலையில் மார்ச் 2017 வரையிலான காலத்தின் வரையில் நிதி பரிமாற்றம் செய்யப்பட்ட தகவல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
3 பில்லியன் டாலர்
மார்ச் 2017ஆம் ஆண்டு வரையில் 17,632 கோடி ரூபாய் நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி ஆகியோருக்குத் தொடர்புடைய நிறுவனங்களுக்குகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதை வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
தொடர் அதிகரிப்பு
மார்ச் 2017க்கு பின்பு கடன் அளிக்கப்பட்டுள்ளது, இதிலும் குறிப்பாக அதிக மதிப்புடைய கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி ஆகியோருக்கு வழங்கப்பட்ட கடன் அளவு 3 பில்லியன் டாலரைத் தாண்டும் என முதல்கட்ட ஆய்வுகளில் தெரிகிறது.
கைது...
இந்த மோசடியில் கைதாகியுள்ள இரு வங்கி உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டும் அல்லாமல் ஒவ்வொரு முறையும் கடனுக்கான LoU கடிதம் அளிக்கும் போது கடனின் அளவின் படி இதில் தொடர்புடைய வங்கி அதிகாரிகளுக்குக் கமிஷன் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒத்துழைப்பு
மேலும் கைது செய்யப்பட்ட வங்கி ஊழியர்கள் மோசடி குறித்த விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது.
இன்சூரன்ஸ்
பொதுவாக வங்கிகளில் அளிக்கப்படும் கடன்களுக்கு இன்சூரன்ஸ் பெறப்படும், ஆனால் பஞ்சாப் நேஷனல் வங்கி செய்த அநியாயமான வேலையைப் பாருங்க.