தென் இந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகத்தைக் கொண்டுள்ள டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்செல் அதிகளவிலான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
கடன் நெருக்கடியில் வர்த்தகத்தையும் சேவையும் முழுமையாகச் செயல்படுத்த முடியாத நிலைக்குத் தற்போது ஏர்செல் தள்ளப்பட்டுள்ளது.
திவால்
இதனால் ஏர்செல் நிறுவனம் திவாலாக அறிவிக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) அமைப்பிடம் அணுகியுள்ளதாகவும், திவாலாக அறிவிக்கும் காரணத்திற்காக ஏர்செல் நிறுவனத்தின் உயர்மட்ட குழுவும் முழுமையாகக் கலைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
கடைசி நிறுவனம்
இந்தியாவில் இருந்த கடைசிச் சிறிய டெலிகாம் நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ள ஏர்செல், தனது வர்த்தகத்தை முழுமையாக மூடவும், நிறுவனத்தைத் திவாலாக அறிவிக்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் இனி இந்திய டெலிகாம் சந்தையில் 4 நிறுவனங்கள் மட்டும் தான். இதிலும் இரு நிறுவனங்கள் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக ஏர்டெல், ஐடியா-வோடபோன் கூட்டணி, ஜியோ ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே.
அனந்த கிருஷ்ணன்
ஏர்செல் நிறுவனத்தின் தாய் வீடு தமிழ்நாடு என்றாலும், இந்நிறுவனம் முழுமையாக மேக்சிஸ் என்னும் மலேசிய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மேக்சிஸ் நிறுவனத்தின் தலைவர் அனந்த கிருஷ்ணன்.
கடனில் மிதக்கும் ஏர்செல் நிறுவனத்தில் வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்துவதற்காக முதலீடு செய்ய முடிவு செய்தார் அனந்த கிருஷ்ணன். ஆனால் இந்த முதலீடும் பலன் அளிக்கவில்லை.
செப்டம்பர் முதல்..
ஏர்செல் நிறுவனத்தின் 15,500 கோடி ரூபாய் கடனை மறுசீரமைப்புச் செய்ய நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்களிடம் 2017ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் முதலே ஏர்செல் நிர்வாகம் போராடி வருகிறது. ஆனால் இப்பேச்சுவார்த்தையும் பலன் அளிக்கவில்லை.
IBC சட்டங்கள்
செப்டம்பர் மாதம் முதல் ஏர்செல் வங்கிகளுக்குக் கடனுக்கான தவணையைச் செலுத்தவில்லை. இதனால் சமீபத்தில் அமலாக்கம் செய்யப்பட்ட IBC சட்ட திட்டங்கள் மூலம் நிறுவனத்தைத் திவாலாக அறிவித்து அடுத்தகட்ட பணிகளை இன்னும் சில நாட்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடனை மறுசீரமைப்பு செய்யவும் வழி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளம்
வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்தக்கூட நிறுவனத்தில் பணமில்லை. இனிமேலும் இலவசங்கள் கிடைக்கும் என நம்பிக்கையும் என ஏர்செல் நிறுவனத்தின் ஊழியர் தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்துடன் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதையும் நிறுத்த ஏர்செல் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
5000 ஊழியர்கள்
இதனால் ஏர்செல் நிறுவனத்தில் பணியாற்றும் 5000க்கும் அதிகமான ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஏற்கனவே டெலிகாம் நிறுவன இணைப்புகளால் இத்துறை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், ஏர்செல் இத்துறைக்குக் கூடுதல் சுமையை அளித்துள்ளது.
400 கோடி ரூபாய்
ஏர்செல் நிறுவனம் மாதத்திற்குச் சுமார் 400 கோடி ரூபாய் வருமானத்தைப் பெறுகிறது. இதில் 100 கோடி ரூபாய் பிற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கால் துண்டிப்புக் கட்டணம், 280 கோடி ரூபாய் டவர் சேவை மற்றும் நெட்வொர்க் அப்டைம்-க்காகச் செலுத்தி வருகிறது.
மீதமுள்ள தொகை லைசென்ஸ் கட்டணம், வரி, மற்றும் கடனுக்கான வட்டி பணம்.
ஜடியா செல்லுலார்
மேலும் ஐடியா செல்லுலார் நிறுவனத்திற்கு இன்டர்கனெக்ட் சேவைக்காக ஏர்செல் கடந்த 3 மாதத்தில் சுமார் 60 கோடி ரூபாய் தொகையை நிலுவை வைத்துள்ளது.
சேவை நிறுத்தம்
நிதிப் பற்றாக்குறை மற்றும் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை அளிக்கும் நோக்கில் சில மாதங்களுக்கும் முன்பு ஏர்செல் சுமார் 6 வட்டங்களில் தனது சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
மொபைல் டவர்கள்
ஜிடிஎல் இன்பரா, பார்தி இன்பராடெல், இன்டஸ் டவர்ஸ் மற்றும் ஏடிசி ஆகிய நிறுவனங்களிடம் இருந்து ஏர்செல் சுமார் 40,000 டவர்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நெர்வொர்க் சேவைக்காக எரிக்சன், நோக்கியா, ZTE ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளது ஏர்செல்.
அனைத்து நிறுவனங்களிடமும் நிலுவை தொகை வைத்துள்ளது ஏர்செல், சில நிறுவனங்கள் வழக்கும் பதிவு செய்துள்ளது.