இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நெட்வொர்க்கான ஏர்டெல் மோட்டோரோலா மற்றும் லெனோவா ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு 2,000 ரூபாய் வரை கேஷ்பேக் ஆஃபர் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதே போன்று வோடாஃபோன் நிறுவனம் சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு 1,500 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகைகளைக் கடந்த சில வாரங்களாக வழங்கி வருகிறது.
ஸ்மார்ட்போன்கள்
ஏர்டெல் நிறுவனம் மோட்டோரோலாவின் மோட்டோ சி, மோட்டோ E4 மற்றும் லெனோவா k8 4ஜி ஸ்மார்ட்போன்கள் வாங்குபவர்களுக்கு மட்டும் இந்தச் சலுகையினை அளிக்க இருக்கிறது.
எவ்வளவு சலுகை
கேஷ்பேக் சலுகைகள் பெறுவதன் மூலமாக மோட்டோ சி மொபைல் போனை 3,999 ரூபாயிலும், மோட்டோ E4 போனை 6,499 ரூபாயிலும், லெனோவா k8 போனை 10,999 ரூபாய்க்கு வாங்கிப் பயன்படுத்த முடியும்.
வாடிக்கையாளர்கள்
மோட்டோரோலா மற்றும் லெனோவா ஸ்மார்ட்போன்களுக்குச் சலுகை அளிப்பதன் மூலமாக மேலும் அதிக வாடிக்கையாளர்களைக் கவர முயற்சிகளை எடுத்து வருவதாகப் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மூத்த மார்கெட்டிங் அதிகாரியான வானி வெங்கடேஷ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பான சேவை
ஏர்டெல் வாடிக்கையாளர்களால் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மாறிச் சிறப்பான சேவையினை மோட்டரோலா மற்றும் லென்வோ போன் மூலம் பெற முடியும் என்றும் மோட்டரோலா மொபிலிட்டி இந்தியா மற்றும் லெனோவா இந்தியா பிரிவின் நிர்வாக இயக்குனரான சுதின் மதூர் தெரிவித்துள்ளார்.