பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய நீரவ் மோடி 11,400 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகத் தேடப்பட்டு வரும் நிலையில் 1,323 கோடி ரூபாய்க்கு கூடுதலாகப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இந்திய வங்கிகள் வரலாற்றில் மிகப் பெரிய கடன் மோசடியாக 11,400 கோடி ரூபாய் என இருந்த நிலையில் அது தற்போது 12,723 கோடிரூபாயாக அதிகரித்துள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
பிப்ரவரி 14-ம் தேதி பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதிகாரிகள் நீரவ் மோடியுடன் கூட்டு சேர்ந்து LoUs கீழ் வெளிநாட்டு வங்கி கிளைகளுக்குப் பணம் அளித்து 11,400 மோசடி ரூபாய்ச் செய்துள்ளதாகத் தெரிவித்து இருந்தது.
மும்பை பங்கு சந்தை
மேலும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி மும்பை பங்கு சந்தைக்குத் திங்கட்கிழமை (26/02/2018) தாக்கல் செய்த அறிக்கையில் அனுமதி இல்லாமல் மேலும் ஒரு 1,300 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாகத் தெரியவந்துள்ளது.
துல்லிய விவரம்
தற்போது நமக்குக் கிடைத்துள்ள தகவலின் படி பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நீரவ் மோடி 240.26 மில்லியன் மதிப்பில் மேலும் ஒரு பரிவர்த்தனையில் மோசடி செய்துள்ளதாக மும்பை பங்கு சந்தைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடைய தற்போதைய மதிப்பு 1,323 கோடி என்று இன்றைய ரூபாய் மதிப்புடன் ஒப்பிடும் போது தெரியவந்துள்ளது.
விசாரணை
நீரவ் மோடி வழக்குடன் தொடர்புடையதாக அவரது மாமா மேஹூல் சோக்ஷி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஊழியர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையில் உள்ளனர்.