பழைய டெலிகாம் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை: சுனில் மிட்டல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காகப் போராடி வருவதாகவும் அதிலும் புதிதாக வந்துள்ள நிறுவனங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம் என்று இருப்பதை டிராய் கண்டு கொள்வாதாகத் தெரியவில்லை என்றும் அதனால் நீதி மன்றத்தில் முறையிடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

ஏர்செல்

ஏர்செல்

ஏர்செல் நிறுவனம் குறித்துக் கேட்ட போது இந்திய டெலிகாம் சந்தை மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அதிலும் ஏர்செல் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் நிதி அளிக்க மறுத்துவிட்டதால் மூட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜியோ

ஜியோ

இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் ரீசார்ஜ் பேக்குகள் மீது கொண்டு வந்துள்ள புதிய விதியானது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்குச் சாதகமானதாக உள்ளது இவர்கள் இருவாரால் தான் இந்திய தொலைத்தொடர்பு துறை இந்த அளவிற்குப் பாதிப்பினை சந்தித்து வருவதாகவும் பிற டெலிகாம் நிறுவனங்கள் புலம்பி வருகின்றனர்.

டிராய்
 

டிராய்

டிராய் தலைவர் ஆர் எஸ் சர்மா செவ்வாய்க்கிழமை தாராலமாக டெலிகாம் நிறுவனங்கள் நீதிமன்றம் சென்று தீர்ப்பு வாங்கி வரட்டும் என்று கூறியுள்ளார். டிராய் இப்படிக் கூறியுள்ளது எங்களை ஏமாற்றம் அளிக்க வைத்துள்ளது. எவ்வளவு காலம் தான் கையில் இருந்து முதலீடு செய்வது என்று சுனில் மிட்டல் கூறிவருகிறார்.

டெலிகாம் நிறுவனங்கள்

டெலிகாம் நிறுவனங்கள்

மிட்டல் கையைக் கட்டிக்கொண்டு டெலிகாம் நிறுவனங்கள் வேடிக்கை பார்க்காது என்று கூறியுள்ள நிலையில் வோடாபோன் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விட்டோரியோ அதனை ஆதரித்துள்ளார்.

பிப்ரவரி 16ம் தேதி டிராய் வெளியிட்டு புதிய விதிகளானது டெலிகாம் சந்தையில் 30 சதவீதத்திற்கும் குறைவான வாடிக்கையாளர்களை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்படியானதாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

 

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

ஜியோ நிறுவனத்திற்கு 13 முதல் 14 சதவீதம் வரையிலான சந்தை வருவாய் மற்றும் பயனர்கள் மட்டுமே உள்ள நிலையில் ஏர்டெல் மற்றும் வோடாபோன் - ஐடியா நிறுவனங்களுக்கு 30 சதவீதத்திற்கும் அதிகமாகவே உள்ளது. வாடிக்கையாளர்களை என்ன தான் தக்கவைத்துக்கொள்ள முயன்றாலும் புதிய விதிகள் ஜியோவிற்குச் சாதகமாகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

 போட்டி நிறுவனங்கள்

போட்டி நிறுவனங்கள்

ஜியோ நிறுவனம் சேவை அளிக்கத் துவங்கியதில் இருந்து போட்டி நிறுவனங்களும் கோடி கணக்கில் முதலீடு செய்துள்ளதுடன் வாடிக்கையாளர்களுக்குப் பல விதமான சலுகைகளையும் வழங்கி வருகின்றன.

ஏர்டெல்

ஏர்டெல்

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மிகப் பெரிய முதலீட்டாளரான சிங்டெல் 2,649 கோடி ரூபாயினைச் சில மாதங்களுக்கு முன்பு முதலீடு செய்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு துறை என்ன தான் மோசமாக இருந்தாலும் ஏர்டெல் அதனை உடைத்து எரிந்து டாப் நிறுவனமாக இருக்கும் என்று சிங்டெல் இருக்கிறது. ஆனாலும் நாங்கள் அதிகப்படியான உத்தரவாதங்களைப் பங்குதார்களுக்கு அளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகச் சுனில் மிட்டல் கூறுகிறார்.

 திவாலான ஏர்செல்

திவாலான ஏர்செல்

சிறு டெலிகாம் நிறுவனங்களைக் கையகப்படுத்த வேண்டும் என்றாலும் ஏர்செல் உட்பட யாரும் இல்லை என்றும் ஏர்செல் நிறுவனத்தினால் முறையாகச் சேவை வழங்க முடியாமல் விற்க முடியாது என்றும் முதலீட்டாளர்களும் கைவிட்ட நிலையில் திவால் ஆகப்பட்டதாக அறிவிக்க மனு அளித்துள்ளதாகவும் மிட்டல் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Older telcos have no choice other then moving court: Sunil Mittal

Older telcos have no choice other then moving court: Sunil Mittal
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X