இந்தியாவில் தற்போது இருக்கும் தகுதிகுறைந்த வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்றால் 2030 வரையில் தொடர்த்து ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும் என ஒரு முக்கிய ஆய்வறிக்கை கூறுகிறது.
மோடி அரசு இதைச் செய்யுமா..?
மோத்திலால் ஆஸ்வால்
நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பு பிரச்சனைகளைத் தீர்க்க அடுத்த 12 வருடத்திற்குக் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும் 8,30,000 வேலைவாய்ப்புகளைக் கண்டிப்பாக உருவாக்கியாக வேண்டும் என மோத்திலால் ஆஸ்வால் நிறுவனம் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
15 வருட வளர்ச்சி
அடுத்த வருடத்தில் இந்தியா வேலைவாய்ப்புச் சந்தையில் சுமார் 8 கோடி ஊழியர்களை வரை உயர்ந்திருக்கும். ஆனால் இது அன்றைய வேலைவாய்ப்பு சந்தை தேவை அளவை விடவும் மிகவும் குறைவானது.
இந்த 8 கோடி ஊழியர்களில் குறைந்தபட்சம் 20-30 சதவீத பேர் தகுதிகுறைந்த வேலைவாய்ப்பில் இருப்பார்கள், இதனால் இந்தப் பிரச்சனையும் தீர்க்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 8,30,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியாக வேண்டும்.
இருப்பு
இந்த ஆய்வின் மூலம் தற்போது இந்தியாவில் 2.9 கோடி ஊழியர்கள் மிகவும் குறைவான அளவில் பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளதும் (underutilised), ஊக்குவிக்கப்படாத 40 லட்ச பெண்கள் வேலைவாய்ப்பு சந்தைக்கு வெளியில் உள்ளனர்.
அதுமட்டும் அல்லாமல் 30 பேர் நிரந்த சம்பளம் பெற விரும்பு இடத்திலும் உள்ளனர் என்பதையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தகுதிகுறைந்த வேலைவாய்ப்பு
இந்தியாவில் மட்டும் தற்போத 3.6 கோடி பேர் தகுதிகுறைந்த வேலைவாய்ப்பில் பணியாற்றி வருகின்றனர். இது 15 வயதுக்கு அதிகமான மக்கள் தொகையில் 4 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
LFPR அளவு..
சர்வதேச வேலைவாய்ப்பு துறையின் கணிப்புகள் பிடி இந்தியாவின் labour force participation rate (LFPR) அளவு தற்போது இருக்கும் 53.9 சதவீத அளவு மாறவில்லை எனில் இந்திய அரசு ஒவ்வொரு வருடமும் 10 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
மோடி அரசு
2022வரையிலான 7 வருட காலத்தில் உற்பத்தித் துறையில் மட்டும் சுமார் 10 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் வருடத்திற்கு 1.4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
மேக் இன் இந்தியா
உற்பத்தித் துறையை மையமாக வைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்கக் காரணம் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம்.
ஆனால் மேக் இன் இந்தியா திட்டம் வெற்றிபெறவில்லை என்பதே நிதர்சனம்.
சாயம் வெளுத்தது..
பட்ஜெட் அறிவிக்கப்பட்ட பின்பு மோடியுடன் இருந்தவர்கள் மேக் இன் இந்தியா திட்டத்தைப் பற்றிச் சொல்வதைப் பாருங்கள்.