கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய பங்குச்சந்தையின் டாப் 10 நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் சுமார் 27000 கோடி ரூபாய் அளவிலான சந்தை மூலதனத்தை இழந்துள்ளது.
இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனம் எது தெரியுமா..?
மும்பை பங்குச்சந்தை
பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளின் தாக்கத்தின் வாயிலாக மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான சரிவை சந்தித்து. இதனால் சிறு சிறு நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
முக்கியமான நிறுவனங்கள்
கடந்த ஒரு வாரத்தில் எஸ்பிஐ, டிசிஎஸ், ஐடிசி, ஒஎன்சிஜி மற்றும் எச்டிஎப்சி வங்கி ஆகியவை அதிகளவிலான சரிவை சந்தித்தது.
இதனால் முதலீட்டாளர்கள் அதிகம் பாதிப்படைந்தனர்.
லாபம் பெற்ற நிறுவனங்கள்
மறுபுறம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, எச்டிஎப்சி, இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்களின் சந்தை மூலதனத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
எஸ்பிஐ
வியாழக்கிழமை வரையிலான வர்த்தகத்தில் மட்டும் எஸ்பிஐ வங்கி சுமார் 11,696.44 கோடி ரூபாய் இழந்து 2,26,634.57 கோடி என்ற சந்தை மூலதனத்தை அடைந்தது.