உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான், சீனாவில் அலிபாபா மற்றும் JD.com நிறுவனங்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற முடியாமல் வர்த்தகத்தில் பெரிய அளவிலான தோல்வியை ஆடைந்துள்ளது.
அலிபாபாவின் ஆதிக்கம் சீனாவில் மட்டும் அல்லாமல் அமெரிக்காவிலும் அதிகமாக இருக்கும் காரணத்தால் அமெரிக்காவிலும் அமேசானுக்குக் கணிசமான தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமே
இந்நிலையில் அமேசான் நிறுவனத்திற்குத் தற்போது இருக்கும் ஓரே வாய்ப்பு இந்தியா மட்டுமே.
சுமார் 1.3 பில்லியன் மக்கள் கொண்ட மிகப்பெரிய சந்தையாக விளங்கும் இந்தியாவை முக்கிய வர்த்தகத் தளமாகக் கொண்டு இனி அமேசான் வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளது.
5.5 பில்லியன் டாலர்
இதற்காக அமெரிக்காவில் இருக்கும் தலைமை நிறுவனமான அமேசான்.காம் இன்க் சுமார் 5.5 பில்லியன் டாலர் அளவிலான தொகையை இந்திய சந்தை வர்த்தகத்திற்குக் கொடுத்துள்ளது.
அமித் அகர்வால்
இந்தப் பெரும் தொகையைச் சரியான முறையில் செலவு செய்து வர்த்தகம் அதிகரிக்கும் பணியின் முழுப் பொறுப்பு இந்திய கிளை தலைவர் அமித் அகர்வால் கையில் உள்ளது.
அமெரிக்க நிறுவனமான அமேசானை இந்திய மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ந்த பெருமை அமித் அகர்வாலுக்கு உண்டு.
சிறப்பான சேவை
அமேசான் நிறுவனத்தின் வர்த்தக முறை மற்றும் சேவை சிறப்பான முறையில் உள்ளது. கணினி மற்றும் மொபைல் என இரண்டு மகிப்பெரிய தளத்தில் தடையில்லா சேவையை வழங்கும் அளவிற்குத் தரமான தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது அமேசான் இந்தியா.
போட்டி
இந்த முதலீடு மூலம் பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், பேடிஎம் போன்ற நிறுவனங்களுக்கு மிகப்பெரிய போட்டி உருவாக உள்ளது.