இந்திய தனிநபர் அடையாள ஆணையம் அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிவதற்கான சேவையினை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் மொபைல் எண் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எளிதாகத் தங்களது ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிந்து இணைப்பைச் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதனால் இந்த உத்தரவு?
டெலிகாம் நிறுவனங்களின் சில ரீடெய்ல் கடைகள் மற்றும் ஏஜெண்ட்கள் ஆதார் எண்ணைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் புதிய சிம் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் ஆக்டிவேட் செய்கிறார்கள் என்ற தகவல் வந்ததை எடுத்து ஆதார் ஆணையம் மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிய சேவை வழங்க உத்தரவிட்டுள்ளது.
கண்காணிப்பு
டெலிகாம் நிறுவனங்களை ரீடெய்ல் கடைகள் மற்றும் ஏஜெண்ட்கள் தவறாக ஆதார் சரிபார்ப்பு முறையினைப் பயன்படுத்திகிறார்களா என்று கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 15
மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிவதற்கான சேவையானது 2018 மார்ச் 15-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதார்
நாடு முழுவதில் இருந்தும் 1.2 பில்லியன் மக்கள் தங்களது பையோமெட்ரிக் விவரங்களை அளித்து 12 இலக்க அதார் எண்ணைப் பெற்றுள்ளனர். அதார் கார்டு தற்போது பல அரசு சேவைகள் மற்றும் அரசு சாரா சேவைகளுக்கும் அடையாள மற்றும் முகவரி ஆவணமாகப் பெறப்பட்டு வருகிறது.
கருப்புப் பணம்
கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கப் பான் எண் மற்றும் வங்கி கணக்கிலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.