ஆதார் எண்ணை மொபைல் எண், வங்கி கணக்கு மற்றும் பிற சேவைகளில் இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31-க்கு பிறகும் நீட்டிக்கலாம் என்று செவ்வாய்க்கிழமை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதே போன்று ஏற்கனவே ஆதார் இணைப்பிற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளனர். அதனை மீண்டும் செய்யலாம். இந்த வாய்ப்பு எவ்வளவு உதவுகிறது என்று பார்க்கலாம். தேவைப்பட்டால் மீண்டும் ஒரு முறை கூடக் காலக்கெடுவை நீட்டிக்கலாம் என்றும் நீதியரசர் தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியலமைப்புச் சட்ட குழுவிற்கு அளித்த பதிலில் இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியுள்ளார்.
காலக்கெடுவை நீட்டிக்க மனுதாரர்கள் வைக்கும் கோரிக்கை வருத்து முடிவு செய்யலாம் என்றும் மார்ச் 31-க்கு முன்பு எந்த முடிவையும் எடுக்கத் தேவையில்லை என்றும் வேணுகோபால தெரிவித்துள்ளார்.
அதார் இணைப்பிற்கான காலக்கெடு விரைவில் முடிய இருக்கும் நிலையில் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை அடுத்து காலக்கெடு நீட்டிப்பு குறித்து ஆலோசனையினை உச்ச நீதிமன்றம் அட்டார்னி ஜெனரலிடம் கேட்கப்பட்டுள்ளது. தற்போது காலக்கெடு நீட்டிப்பு குறித்து மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிபதிகள் இது குறித்து முடிவு செய்ய நேரம் எடுத்துக்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
எனவே 2018 மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீட்டிப்பு பற்றி அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது.