கோதுமை உற்பத்தி குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கோதுமை சார்ந்த தயாரிப்புகளை வாங்கும் போது எம்ஆர்பி விலையினை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டதாக ஐடிசி நிறுவனத்தின் விவசாயத் துறை தலைவர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018 ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள பயிர் வருடத்தில் கோதுமை உற்பத்தியானது 1.42 சதவீதம் வரை சரிந்து 97.11 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மத்திய அரசின் இரண்டாம் முன்கூட்டிய மதிப்பீடு ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோதுமை தேவை
மத்திய அரசு 32 மில்லியன் டன் கோதுமையினை வங்க இருப்பதாகவும் அதே அளவும் தனியார் நிறுவனங்களுக்கும் தேவைப்படுவதாகவும் அதில் 2 மில்லியன் டன் ஐடிசி நிறுவனத்திற்கான தேவையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் வருவாய்
பாவந்தர் புக்டன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வருவாயினை அதிகப்படுத்தும் நோக்கத்தில் கோதுமை மீதான விலையினை நடப்பு ஆண்டில் மத்திய அரசு விரைவில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடிசி-ன் புதிய வணிகம்
வரும் ஆண்டு முதல் இயற்கையான காய்கறிகள் மற்றும் பழ வகைகளை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பெற்று மெட்ரோ நகரங்களில் விற்பனை செய்யும் திட்டத்தில் ஐடிசி நிறுவனம் இறங்கியுள்ளது.
தனியங்கள்
காய்கறிகள் மற்றும் பழங்கள் இல்லாமல் தானியங்களையும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்யத் திட்டமுல்லதாக ஐடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக வெளிநாடுகளில் இருந்து தானியங்களை இறக்குமதி செய்ய ஐடிசி நிறுவனம் முடிவு செய்துள்ளது.