உலகின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான உபர் முதல் முறையாகத் தனது இந்திய வர்த்தகத்திற்குப் பிராண்ட் அம்பாசிட்டராக ஆசிய நாட்டவரை நியமித்துள்ளது.
இன்றைய சூழ்நிலையில் மிகவும் பிசியாகவும், வெற்றிப்பாதையில் கம்பீரமாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் விராத் கோஹ்லியை தேர்வு செய்யதது உபர் நிறுவனத்தின் ஸ்மார்ட்டான முடிவு என்றே சொல்ல வேண்டும்.
பல திட்டங்கள்
இந்நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் பணிகளுக்காக விராத் கோஹ்லி உபர் உடன் இணைந்து பணியாற்ற உள்ளார் என உபர் இந்தியா தெரிவித்துள்ளது.
முதல் முறையாக
உபர் நிறுவனம் இதுவரை அமெரிக்கா மற்றும் பிர நாட்டவர்களை மட்டுமே பிராண்டு அம்பாசிட்டராக அறிவித்து வந்த நிலையில் முதல் முறையாக ஆசிய நாட்டைச் சேர்ந்தவரை நியமித்துள்ளது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
எகிப்து சந்தை
கடந்த மாதம் எகிப்து நாட்டுச் சந்தையில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறுவதற்காகப் புட்பால் வீரர் முகமது சால்ஹா பிராண்ட் அம்பாசிட்டராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்ட்அப்
உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனமான உபர் இந்தியாவில் ஆன்லைன் டாக்ஸி சேவையில் முன்னணி நிறுவனமாகத் திகழ வேண்டும் என்பதற்காகப் பல மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது.
விராத் கோஹ்லி
இன்றளவில் விராத் கோஹ்லியின் பிராண்டு மதிப்பு 14.5 மில்லியன் டாலராக உள்ளது. இவர் உலகில் 7வது மதிப்புமிக்க விளையாட்டு வீரராக உள்ளார். முதல் இடத்தில் லியோனல் மெசி உள்ளார்.
உபர் ஒப்பந்தம் மூலம் 6வது இடத்திற்கு முன்னேற்றம் அடைய வாய்ப்பு உள்ளது.
என்னது ர..." data-gal-src="http:///img/600x100/2018/03/virushka2-1520596666.png">