காதி தொழிலுக்கு என்ன ஆனது? 7 லட்சம் பேருக்கு வேலை பறிபோனது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: காதி துறையில் இருந்து ஊழியர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். அன்மையில் மக்களவைவில் வெளியான தகவலின் படி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இருந்து 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில் காதித் துறையில் 7 லட்சம் ஊழியர்கள் பணியை விட்டு வெளியேறியுள்ளது.

 

ஆனால் இந்தத் தரவுகளை ஆராய்ந்து பார்த்த போது ஊழியர்கள் வெளியேறிய எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சரிந்த வேலைவாய்ப்பு

சரிந்த வேலைவாய்ப்பு

2015-ம் ஆண்டு வரை 11.6 லட்சமாக இருந்த காதி ஊழியர்கள் எண்ணிக்கை 2015-2016 மற்றும் 2016-2017 நிதி ஆண்டில் 7 லட்சம் குறைந்து 4.6 லட்சமாக உள்ளது. ஆனால் இதில் எத்தனை வேலை வாய்ப்புகள் புதிய தொழில்நுட்பங்களினால் போனது என்பது தெரியவில்லை.

உற்பத்தி

உற்பத்தி

வேலை வாய்ப்புகள் சரிந்த 2015-2016 மற்றும் 2016-2017 நிதி ஆண்டில் காதி பொருட்கள் உற்பத்தியானது 31.6 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்ந்துள்ளது.

புதிய தொழில்னுட்பங்களை
 

புதிய தொழில்னுட்பங்களை

காதி மற்றும் கிராமப்புற தொழில் துறை ஆணையம் இரண்டில் இருந்தும் 2015-2016 நிதி ஆண்டில் எவ்வளவு ஊழியர்கள் வெளியாகி இருப்பார்கள் என்பது தெரியாது. அவை உன்மையான தரவுகளாகவும் இருக்காது. அந்தக் காலகட்டத்தில் புதிதாக ஊழியர்கள் பணிக்கு புதிதாகவும் எடுக்கப்பட்டுள்ளனர்.

கிராமப்புற காதி தொழில்துறை ஆணையமானது பழைய தொழில்னுட்பங்களை மாற்றிப் புதிய தொழில்னுட்பங்களை அறிமுகம் செய்துள்ளதாலும் பணி இழப்புகள் அதிகமாகியுள்ளது.

 

முக்கிய மாநிலங்கள்

முக்கிய மாநிலங்கள்

உத்தர்காண்ட், உத்தர் பிரதேஷ், சட்டிஷ்கர், மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் 3.2 லட்சம் வேலை இழப்புகள் காதி துறையில் நடைபெற்றுள்ளன. பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒதிசா, அந்தமான் & நிக்கோபார் ஆகிய இடங்களில் 1.2 லட்சம் வேலை வாய்ப்புகள் இழப்பு காதி துறையில் ஏற்பட்டுள்ளன.

பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்குதல் திட்டம்

பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்குதல் திட்டம்

பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்குதல் திட்டத்தில் 2016-2017 நிதி ஆண்டில் உருவாக்கப்பட்ட 4.1 வேலை வாய்ப்பானது 2017-2018 நிதி ஆண்டில் 3.2 லட்சமாகச் சரிந்துள்ளது.

2017-2018 நிதி ஆண்டின் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்குதல் திட்டத்தின் முதல் 10 மாதங்களில் 2.5 லட்சம் ஊழியர்களுக்கு வேலைக் கிடைத்துள்ளது. பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்குதல் திட்டத்தின் கீழ் புதிதாகத் தொழில் துவங்குபவர்களுக்குக் கிராமப்புறங்கள் மற்றும் புற நகரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு மானியம் போன்றவையும் வழங்கப்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 lakh job loss in Khadi, but production increases. How?

7 lakh job loss in Khadi, but production increases. How?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X