போஸ்டல் லைப் இன்சூரன்ஸ் கீழ் தபால் நிலையங்களில் ஆயுள் காப்பிடு திட்டங்களை அளிப்பது பொன்று கிராமப்புற தபால் நிலையங்களிலும் ரூரல் போஸ்டல் லைப் இன்சூரன்ஸ் கீழ் ஆயுள் காப்பீடு பாலிசிகளை வாங்க முடியும்.
குறைந்த கட்டணத்தில் அதிகப் பயன் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ரூரல் லைப் இன்சூரன்ஸ் பாலிசிகள் அளிக்கப்படுகின்றன. ஆர்பிஎல்ஐ ( RPLI) எனும் ரூரல் போஸ்டல் லைப் இன்சூரன்ஸ்)எனும் கிராமப்புற தபால் ஆயுள் காப்பீடு வழங்கும் திட்டங்கள்:
1.முழு ஆயுள் காப்பீடு (கிராம சுரக்ஷ)
2.மாற்றக்கூடிய முழு ஆயுள் காப்பீடு (கிராம சுவிதா)
3.மானிய உத்திரவாதம் (கிராம சந்தோஷ்)
4.எதிர்பார்க்கப்பட்ட மானிய உத்திரவாதம் (கிராம சுமங்கள்)
5.10 வருட ஆர்பிஎல்ஐ (கிராம் பிரியா)
6.குழந்தைகள் பாலிசி (பால் ஜீவன் பீமா)
கிராம சுரக்ஷ,கிராம சுவிதா,கிராம சந்தோஷ்,கிராம சுமங்கள் ஆகிய திட்டங்களின் முக்கிய அம்சங்கள் ஏற்கனவே பீ எல் ஐ ( PLI) ல் உள்ள திட்டங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.இதில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை சேமிப்பு 10,000 ரூபாய் முதல் அதிகபட்ச காப்பீட்டுத் தொகை சேமிப்பு 10,00,000 என்பது மட்டுமே சற்று வேறுபடுகிறது.கிராம சுரக்ஷ மற்றும் கிராம சந்தோஷ் திட்டங்களுக்குப் பயனாளர்களாக 55 என்பது அதிகபட்ச வயது வரம்பு ஆகும். இது மற்ற திட்டங்களுக்கு 45 மட்டுமே.
கட்டாய மருத்துவப் பரிசோதனை என்பது அனைத்துத் திட்டங்களுக்கும் முக்கிய விதி ஆகும்.மருத்துவம் சாராத பாலிசிகளுக்கு அதிகபட்ச காப்பீட்டுத் தொகை 25,000 மற்றும் 35 வயது என்பது அதிகபட்ச வரம்பாகும்.இதுவே வயது சான்றிதழ் சரியாக இல்லாதவர்களுக்கு RPIL- ல் (ஆர் பி ஐ எல்) 45 என்பது அதிகபட்ச வயது வரம்பாகும்.