இந்திய சந்தையில் தற்போது ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது இந்திய சந்தைக்கு இயல்பான ஒன்றுதான், ஆகவே இதுகுறித்து முதலீட்டாளர்கள் பயப்பட வேண்டாம்.
ஜனவரி முதல்..
மும்பை பங்குச்சந்தையில் ஜனவரி முதல் அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் அதிகளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது.
இதேவேளையில் லார்ஜ்கேப் பங்குகளும் சரிவை சந்தித்துள்ளது, ஆனால் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் விடக் குறைவான அளவிலேயே சரிவு ஏற்பட்டுள்ளது என ஸ்மால்கேப் பங்கு முதலீட்டாளர் பொரின்சூ வெளியாத் கூறியுள்ளார்.
பங்குச்சந்தையின் நிலை
ஜனவரி 29ஆம் தேதி சென்செக்ஸ் குறியீடு எப்போதும் இல்லாத வகையில் 36,443 என்ற மிகப்பெரிய உச்சத்தைத் தொட்டது. ஆனால் அதன் பின் ஏற்பட்ட தொடர் சரிவின் காரணமாக மார்ச் 9ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் சுமார் 8 சதவீதம் வரை சென்செக்ஸ் சரிவை சந்தித்துள்ளது.
இதேகாலக்கட்டத்தில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் சுமார் 13 மற்றும் 14 சதவீதம் வரையில் சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மட்டமான நிறுவனங்கள்
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் தற்போது சரிவில் இருந்து மீளத் துவங்கியுள்ள காரணத்தால் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய இது சரியான நேரம். ஆனால் நிறுவனங்களைச் சரியான முறையில் ஆய்வு செய்து தேர்வு செய்யவேண்டும்.
மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் பல நிறுவனங்கள் போலி நிறுவனங்களாக உள்ளதால் முதலீட்டாளர்கள் நிறுவனங்களைத் தேர்வு செய்யும் முன் சரியான நிறுவனங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.
25 சதவீத நிறுவனங்கள்
இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் 25 சதவீத நிறுவனங்கள் அடுத்த 10 வருடத்தில் வர்த்தகத்தில் இருந்து வெளியேறும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது.
இதனைப் பங்குச்சந்தையில் சோர் (திருட்டு) நிறுவனங்கள் எனக் கூறப்படும்.
எளிதான காரியமில்லை..
பொதுவாக இத்தகைய நிறுவனங்களைக் கண்டுபிடிப்பது எளிதான காரியமில்லை. ஆகவே முதலீட்டாளர்கள் நிறுவனத்தைத் தேர்வு செய்யும் முன் தத்தம் நிறுவனத்தில் முதலீட்டு அறிக்கை, நிர்வாக அறிவிப்புகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஆய்வு செய்யலாம்.