பிட்காயின், எதீரியம் மற்றும் ரிப்பல் உள்ளிட்ட கிரிப்டோ கரன்ஸிகளின் மதிப்பு எல்லாம் சென்ற ஆண்டுப் பல மடங்கு உயர்ந்தது. ஆனால் 2018-ம் ஆண்டின் துவக்கத்தில் இவற்றின் மதிப்பு சரிந்து தற்போது தான் உயர்ந்து வருகிறது.
அன்மையில் ஃபோர்ப்ஸ் இதழ் உலகின் மிகப் பெரிய பில்லியனர்கள் பட்டியலை வெளியிட்டது மட்டும் இல்லாமல் கிரிப்டொ கரன்ஸி பில்லியனர்கள் பட்டியலையும் அவர்கள் வைத்து இருக்கும் கரன்ஸி மதிப்பினை வைத்து கணக்கிட்டு அறிவித்துள்ளனர். இது ஜனவரி 19-ம் தேதி மதிப்பினை வைத்துக் கணக்கிடப்பட்டுள்ளது.
கிரிஸ் லேர்சன்
கிரிஸ் லேர்சன் ரிப்பல் கரன்ஸியின் இணை நிறுவனர் ஆவார். தற்போது இவரிடம் 7.5 முதல் 8 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோ கரண்ஸி உள்ளது.
ஜோசப் லூபின்
எத்தீரியம் கரன்ஸி இணை நிறுவனரான கிரிஸ் ஜோசப் லூபினுக்கு 53 வயது. இவரிடம் 1 முதல் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோ கரன்ஸி உள்ளது. ஸ்விஸ் அடிப்படையிலான எத்தீரியம் கரன்ஸி எனப் பல நிறுவனங்களை இவர் துவங்கி நடத்தி வருகிறார்.
சாங்பெங் ஜாவோ
பினான்ஸ் எனப்படும் உலகின் மிகப் பெரிய கிரிப்டோ கரன்ஸி எக்ஸ்சேஞ் நிறுவனத்தினை நடத்தி வரும் இவருக்கு 1.1 முதல் 2 பில்லியன் டாலர் வரை கிரிப்டோ கரன்ஸிகள் இருக்கிறது.
விங்க்லிவோஸ் டிவின்ஸ்
இரட்டை சகோதரர்கள் கேமரூன் மற்றும் டைலர் வின்கிளோசோஸ் இருவருக்கும் தற்போது வயது 36. இவர்களிடம் 900 மில்லியன் டாலர் முதல் 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோ கரன்ஸிகள் உள்ளது. 2015-ம் ஆண்டு ஜெமினி என்ற டிஜிட்டல் கரன்ஸி எக்ஸ்சேஞ் நிறுவனத்தினை இவர்கள் துவங்கினர். அதற்கு முன்பு இவர்கள் பிட்காயினில் தான் அதிகம் முதலீடு செய்து வந்தனர்.
மேத்திவ் மெல்லோன்
முதலிட்டாலர் ஆன மேத்திவ் மெல்லோன் ரிப்பிள் காயின் மூலமாகத் தனது கிரிப்டோ கரன்ஸி முதலீடுகளைத் துவங்கினார். தற்போது இவரிடம் 900 மில்லியன் முதல் 1 பில்லியன் மதிப்பிலான ஃபார்ச்யூன் கிரிப்டோ கரன்ஸிகள் உள்ளன.